தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் துறையின் முதன்மைச் செயலாள ரிடம் மனு அளிக்கப்பட்டது. முக்கிய கோரிக்கைகள் 1. 2006 வனஉரிமைச் சட்டப்படி மனு செய்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். 2. பழங்குடியினருக்கான காலி யாக உள்ள பின்னடைவு பணி யிடங்களை நிரப்ப வேண்டும். 3. மலைப்புலையன், குறவன், ஈரோடு மாவட்ட மலையாளி, வேட்டைக் காரன் ஆகிய இனங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். 4. திருவள்ளூர் மாவட்டத்தில் கொண்டாரெட்டிஸ் சமூகத்தைச் சேர்ந்த 296 பேரின் பழங்குடி இனச்சான்றை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் இரா.சரவணன், மாநில துணை செயலாளர் ஜி.ஆர்.பிரகாஷ், குறுமன்ஸ் சங்கத் தலைவர் எல்.சிவலிங்கம், கொண்டாரெட்டிஸ் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகி யோர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இனங்களைப் பட்டியலில் சேர்க்கக் கோரி விவரங்கள்
மலைப்புலையன்
- 1975 வரை பழங்குடி பட்டியலில் இருந்தது.
- 2013இல் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மீண்டும் சேர்க்க பரிந்துரை.குறவன்
- 2006இல் முன்னாள் முதல்வர் கலைஞர் பரிந்துரை செய்தார்.
- 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி மையத்தில் நிலுவையில் உள்ளதுவேட்டைக்காரன்
- ஆராய்ச்சி மையம் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது.
- பாண்டிச்சேரியில் ஏற்கெனவே பட்டிய லில் உள்ளதுஈரோடு மாவட்ட மலையாளி
- 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
- தேசிய பழங்குடி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.வேலைவாய்ப்பு கோரிக்கை
- பழங்குடி மக்கள் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர்
- பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்ற னர்.
- ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.