சென்னை,அக்.19- தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியோடு, இந்தி நாள் விழா கொண்டாட்டங்களும் நடத்தப் பட்டது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றபோது, இசைக்கப் பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ’தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திரு நாடும்’ என்ற வரியைப் பாடாமல் பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் கடும் கண்டனத்தை எழுப்பி னர். இந்த விவகாரத்தில் ஆளுநரின் பதிவை முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ‘பாஜக அரசு பல்வேறு அமைப்பு களை நிறுவித் தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடு களிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி’ எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவ தாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ் மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு தில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப் பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுக ளுக்கு முன்பு செலவிடப்பட்டதை விட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிரு தத்திற்கு செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப் பட்டது. அதுமட்டுமில்லை, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துக ளைத் தமிழ் மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ் நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிட மிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.