tamilnadu

img

அரசு மனநல மருத்துவமனையை தனியார் கம்பெனி போல நடத்தக் கூடாது

சென்னை, அக்.27 - சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையை (Institute of  Mental Health, Kilpauk, Chennai) தனியார் கம்பெனி போல நடத்த சுகா தாரச் செயலாளர் விடுத்துள்ள உத்தர வை, தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுக் கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய லாளர் மரு.எஸ்.காசி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு மனநல மருத்துவமனை சுமார் 230 வருட பாரம்பரியம் உடைய மருத்துவமனை யாகும்.  தினந்தோறும் ஆயிரத்துக்கும்  மேற்பட்ட புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வரு கிறது.  அதோடு மட்டுமல்லாமல்  800 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் முழுக்க முழுக்க அரசின் பராமரிப்பி லேயே பாதுகாக்கப்பட்டு வருவது இதன் சிறப்பம்சம். தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து  ஏழை எளிய மக்கள் மனநலம் சார்ந்த சிகி ச்சைக்கு அரசு மனநல மருத்துவமனை யை நாடி வருகின்றனர்.  பெங்களூரில் இயங்கும் ஒன்றிய  அரசின் நிமான்ஸ் (NIMHANS) நிறுவ னத்திற்கு இணையான சேவைகளை வழங்கி வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் உள்கட்ட மைப்பு வசதிகளை பெருக்கி, தேவைக்கு ஏற்ப மனித வளத்தினை அதிகப்படுத்துவது மருத்துவத்துறை செயலாளரின் இன்றியமையாத கடமை யாக இருக்க வேண்டும்.  நிலைமை இவ்வாறாக இருக்க, தற்போது மருத்துவத்துறை செயலாள ராக இருப்பவர் தனக்கு கீழ் இயங்கும் அதிகாரியான மருத்துவக் கல்வி  இயக்குநருக்கு ஒரு உத்தரவிட்டுள் ளார்.  அதில் கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையை மேம்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்து, அர சால் திறம்பட நடத்த இயலாததால், அதனை கம்பெனி சட்டத்தின் படி அரசின் கம்பெனியாக மாற்றுவதற்கு அரசாணை பெற முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கம்பெனியாக மாற்றும்பட்சத்தில் அதிக நிதி உதவியை கார்ப்பரேட் உள்ளிட்ட பல தனியாரிடம்  பெற முடி யும் என்று காரணம் தெரிவிக்கப் பட்டுள்ளது.  மேலும் அரசு மனநல காப்ப கத்தின் நிர்வாக குழுவில் தனியாரை அனுமதித்து தனியார் கம்பெனி போல செயல்பட இந்த உத்தரவு வழி வகை செய்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், ஏன்... எந்த ஒரு ஒன்றிய அரசு மருத்  துவமனையையும் இத்தகைய கம்பெ னியாக மாற்றியதாக முன்னுதாரணம் ஏதும் இல்லை என்கிற நிலையில் துறைச் செயலாளரின் இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 

துறைச் செயலாளரின்  தன்னிச்சையான முடிவு 

தமிழக  அமைச்சரவை முடிவாகவோ சட்டமன்ற அறிவிப்பாகவோ அல்லது முதலமைச்சரின் அறிவிப்பாகவோ பொதுவெளியில் இல்லாத ஒரு விஷயத்தை, துறையின் செயலாளரே தன்னிச்சையாக முடிவெடுப்பதாகத் தெரிகிறது. கல்வியும் மருத்துவமும் அர சாங்கத்தின் இரண்டு கண்கள் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்து செயல்பட்டு வரும் வேளையில், மருத்துவத்துறைக்கு செலவழிக்க நிதி யில்லை என்பதால் ஒரு மருத்துவ மனையை கம்பெனியாக மாற்றுகிறேன் என்று அரசின் கீழ் இயங்கும் ஒரு அதி காரியால் எவ்வாறு அறிவிக்க முடி கிறது?  மக்களின் சுகாதாரத்துக்கு செல வழிப்பதற்கு அரசிடம் நிதி இல்லை  என்று துறை செயலாளர் ஒப்புக் கொள்கிறார் என்றால் இதுதான் மாநில அரசின் நிலைப்பாடா?  அரசு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை கம்பெனியாக மாற்றுவது என்பது பிற்காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனை களையும் கம்பெனியாக மாற்றி அதை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கப் புள்ளி என்று கருதுவதற்கு  இடம் அளிக்கிறது. நிதி பற்றாக்குறையைக் காரணம் கூறி தனியாரிடம் நிதி பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக நாளை மருத்துவத்துறையை  முழு வதுமாக தனியார் மயமாக்கத் திட்டம்  இருக்கிறதா என்று அச்சம் கொள்ள வைக்கிறது. அவரின் துறையின்  சேவைகளில் குறைபாடு காணப்படும் பொழுது களைய வேண்டிய முழு பொறுப்பு  செயலாளருக்கு உண்டு என்பதை அவர் அறியவில்லையா! அதை சீர் செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரே, சீர் செய்யாமல்  நிர்வாக அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டு வந்து தனியார் மயமாக்கும் வகையில் உத்தரவிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை  கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ மனையை தனியார் கம்பெனி போல நடத்தப் போடப்பட்டிருக்கும் சுகாதார செயலாளர் உத்தரவை திரும்ப பெற நல்வாழ்வுத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.