tamilnadu

img

சென்னையில் மீண்டும் தடம் புரண்ட பயணிகள் ரயில்!

சென்னை, ஜூன் 11- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தி லிருந்து புறப்பட்ட மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட சம்பவம்  பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்திலிருந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) திருவள்ளூர் நோக்கி பயணிகளுடன் ரயில் புறப்பட்டது பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்டி தடம் புரண்டது. இதையடுத்து உடனடியாக ரயிலை நிறுத்திய ஓட்டுநர், இதுகுறித்து ரயில்வே அதி காரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனை யடுத்து, அந்த ரயிலில் பயணித்த பயணி கள் உடனடியாக வெளியேறினர். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்த பயணி களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது பின்னால் வந்த மற்றொரு ரயிலை சிவப்பு கொடி காண்பித்து நிறுத்தி யதால், பெரும் விபத்து நிகழாமல் தடுக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமைதான் சென்ட்ர லில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு திரும்பிச் சென்ற சதாப்தி விரைவு ரயில், இதே பேசின் பிரிட்ஜ் அருகே  தடம் புரண்டது. ரயிலில் பயணிகள் இல்லா மல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களில் அதேபோல் மற்றோரு விபத்து சம்பவம் நடந்துள்ளது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.