தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மூத்த தலைவர் தோழர் எஸ்.பஞ்சரத்னம் படத் திறப்பு நிகழ்ச்சியும், நினைவேந்தல் கூட்டமும் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (நவ. 27) நடைபெற்றது. அவரது படத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். இதில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.