தஞ்சாவூர், ஜூலை 6– தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மனமு டைந்த தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் தனது இரண்டு ஏக்கர் தோப்பில் இருந்த 143 தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்துள் ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தேங் காய் விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்தால், தென்னை விவசாயி கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தென்னை விவசாயத்தை கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பந்துருந்தி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (57).இவர் தேங்காய் விலை வீழ்ச்சியால் பெரிதாக பாதிக்கப்பட்ட நிலை யில், அவருக்கு சொந்தமான கண் டியூரில் உள்ள சுமார் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பில் உள்ள, 143 தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்தார். மேலும் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாயி ராம லிங்கம் கூறுகையில், விவசாயி களிடம் இருந்து வியாபாரிகள் தேங்காயை குறைந்த விலைக்கு வாங்கி சென்று, வெளி சந்தை யில் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இந் நிலையில், ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ஆள் கூலி குறைந்தது 50 ரூபாயும், வெட்டிய தேங்காயை சேகரிக்க, ஒரு நாள் சம்பளம் 600 ரூபாய் கொடுக்க வேண்டியுள் ளது. இதனால் பெரும் வருவாய் இழப்புதான் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை பெரும் வீழ்ச்சி யடைந்துள்ளதால், இனி இதனால் பலன் இல்லை என முடிவு செய்து மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய லாம் என திட்டமிட்டுள்ளேன். இருந்தாலும், அனைத்து மரங்க ளும் நன்றாக காய்க்க கூடிய மரங்களை, பிள்ளைகளை போல் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி மரக்கடைக்கு அனுப்பு வது வேதனையாகத்தான் உள் ளது” என்றார். வளர்ந்த நல்ல காய்ப்பு நிலை யில் உள்ள, தென்னை மரங்களை உரிய வருவாய் இல்லாததால், விவசாயி வெட்டி அகற்றி வரு வது, அவரது வேதனையை பிரதி பலிப்பதாக உள்ளது என பல ரும் தெரிவித்துள்ளனர்.