தஞ்சாவூர், ஜூலை 24 - தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இத னால் வல்லம், பூதலூர் பகுதிகளில் குறுவைக்காக நடப்பட்டு இருந்த இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இந்நிலையில் வல்லம் அருகே முன்னையம்பட்டியில் அமைந்து உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் ஆயிரக் கணக்கான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் தனியார் அரவை ஆலைக்கும், வெளிமாவட்டங்களுக்கு ரயில் மூலம் ஏற்றி அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது. இங்கு தரையில் சவுக்கு கட்டை களை அடுக்கி, அதன் மீது நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் கீழ் பகுதியில் அடுக்கப் பட்டுள்ள ஏராளமான மூட்டை கள் மழை நீரில் நனைந்தும், மூட்டை கள் கிழிந்து சேதமடைந்தும் நெல் மணிகள் சிதறி கிடந்தது.
சேதம டைந்த நெல் மூட்டைகளை, வேறு சாக்குகளில் மாற்றும் பணியை நுகர்பொருள் வாணிபக் கழக ஊழி யர்கள் மேற்கொண்டனர். மேலும், இந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி அரவை ஆலைகளுக்கு அனுப் பும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டை கள் சேதமடைந்தது. இந்த மூட்டை களில் இருந்த நெல் மணிகள் வேறு சாக்குகளில் மாற்றி அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்த போது, “நெல் மூட்டைகள் பெரிய அளவில் சேதம டையவில்லை. குறைவான மூட்டை களே சேதமடைந்து உள்ளன. அந்த நெல்லையும் காயவைத்து வேறு மூட்டைகளில் அனுப்பி அரிசியாக அரைத்து விடலாம். இதனால் இழப்போ, சேதமோ ஏற்பட வாய்ப் பில்லை” என்றனர்.