tamilnadu

img

எல்லை வரையறை முடிந்ததும் பத்திரப் பதிவுக்கு சொந்த அலுவலகங்கள்

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் எல்லைகள் வரையறை பணிகள் முடிந்ததும் பத்திரப்பதிவு அலுவல கங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதனன்று(மார்ச் 23) கேள்வி நேரத்தின்போது செங்கம், திருவண்ணாமலை, போளூர், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும்  மிகவும் பழமை வாய்ந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டடங் களை இடித்து விட்டு புதிதாக அலுவலகங்கள் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து திமுக உறுப்பினர் மு.பெ. கிரி,  அம்முலு, அதிமுக உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “பத்திரப்  பதிவுத் துறையின வரலாற்றிலேயே முதன்முறையாக 15 ஆயிரத்து 500 கோடிக்கும் மேலாக தற்போது வருவாயை ஈட்டி இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் மக்கள் அந்தந்த வட்டத்திலேயே பத்திரப்பதிவை மேற்கொள்ள எல்லை வரையறை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் தேவைப்படும் இடங்களில் புதிய கட்டடங்களும், பழமையான கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக சொந்த அலுவலகங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.