கொச்சி, செப். 1- கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை மாநி லத்தில் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங் களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையின்படி மலைப்பகுதிகளிலும் இதேபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
எந்த நிமிடமும் மேக வெடிப்பு
கேரளாவில் கனமழையை ஏற்படுத்தும் மேக வெடிப்புகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர். 2018 க்குப் பிறகு, மீண்டும் மீண்டும் இது நிகழ்வதாக பதிவு செய்யப்பட்டுள் ளது. முன்னதாக மழைக்காலத்தில் மட்டுமே இருந்த மேக வெடிப்பு, இப்போது மார்ச் முதல் டிசம்பர் வரை எப்போது வேண்டுமானாலும் நிகழ லாம். நிலம் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பமய மாதல் மற்றும் பருவக் காற்றில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்ற னர். கொச்சி நகரில் செவ்வாய்க்கிழமை காலை பெய்த கனமழை லேசான மேக வெடிப்பு காரண மாக ஏற்பட்டதாக குசாட் ரேடார் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு மேக வெடிப்பும் காரணமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஐந்து சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்வது லேசான மேக வெடிப்பாக வும், ஒரு மணி நேரத்திற்கு பத்து சென்டிமீட்ட ருக்கு மேல் மழை பெய்வது மேக வெடிப்பா கவும் கருதப்படுகிறது. கொச்சியில் செவ்வாய்க்கிழமை 7.5 செ.மீ மழை பெய்தது. பருவநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்ப மும், நில வெப்பமும் கட்டுக்கடங்காமல் அதி கரித்து வருவதாகவும், இதனால் காற்றின் திசை யில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டறி யப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதற்கு இதுவே காரணமாக இருக்க லாம் என ஆய்வு மைய விஞ்ஞானி எம்.ஜி.மனோஜ் தெரிவித்துள்ளார்.. புயல், கடலில் குறைந்த காற்றழுத்தம், மலைகளின் மீது வீசும் பருவக்காற்று, மழை மேகங்களை சிதறடிப்பது இவற்றில் ஏதேனும் ஒன்று மேக வெடிப்புக்கு காரணமாகலாம். தெளிவான வான்நிலையி லிருந்து 45 நிமிடங்களுக்குள் கனமழை பொது வானது. அதனால்தான் கணிப்பது சாத்தியமற்ற தாகிறது என்றும் டாக்டர். மனோஜ் தெரிவித்துள் ளார். மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பதிவாகி யிருந்த பலத்த மழை தற்போது நகரங்கள் மற்றும் கிராமங்களில் பரவலாக காணப்படுவதாக துயர் துடைப்பு நிவாரண ஆணையத்தின் வளிமண்டல வியல் நிபுணர் ரஜீவன் எரிகுளம் தெரிவித்துள் ளார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் மழையைப் பதிவு செய்ய தானியங்கி வானிலை நிலையங்கள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளதால், மேக வெடிப்பு போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.