சென்னை,அக்.28- இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு விழாவிற்கு மரியாதை செலுத்த வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக கூடம் அமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்காலிக கூடம் அமைக்கப்படுவதால், ஆண்டுதோறும் சிரமம் உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, தற்காலிக கூடத்தை நிலையான கூடமாக அமைக்கும் வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் முன்பு ரூ. 1.55 கோடி மதிப்பீட்டில், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் 9.800 சதுர அடியில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் ஒன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்பட்டது. அதை திங்களன்று (அக்.28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறை செயலாளர்கள் மங்கத் ராம் சர்மா, வே.ராஜாராமன்,இரா.வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,