tamilnadu

img

திருச்சியில் நீட் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.1- நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதா நினைவு தினமான செப்டம்பர்  1 (ஞாயிறு) அன்று மக்கள் நல்வாழ்விற் கான மருத்துவர் அரங்கத்துடன் இணைந்து, இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீட் எதிர்ப்பு மினி மாரத் தான் ஓட்டம் திருச்சியில் நடை பெற்றது. மினி மாரத்தான் ஓட்டத்தை அமைச் சர் கே.என்.நேரு, சிபிஎம் மத்திய கட்டுப் பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா, வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் லெனின், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  திருச்சி நீதிமன்றம் அருகில் இருந்து  துவங்கிய மினி மாரத்தான், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக சுப்பிரமணியபுரம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து  கொண்டனர். சுப்பிரமணியபுரத்தில் நடந்த பரி சளிப்பு நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு (இரு பாலருக் கும்) தனித்தனியாக முதல் பரிசாக தலா  ரூ.3000, 2 ஆம் பரிசாக தலா ரூ.2000, ஊக்க பரிசாக 10 பேருக்கு ரூ.500 மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ  இருதயராஜ் ஆகியோர் வழங்கினர்.  நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வெற்றி செல்வம், மா மன்ற உறுப்பினர் சுரேஷ், பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாநிலப் பொருளாளர் பாரதி, மாணவர் சங்க மாநிலத் தலை வர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலா ளர் மோகன், மாவட்டத் தலைவர் சூர்யா, மாநகராட்சி மண்டல தலைவர்  மதிவாணன், மக்கள் நல் வாழ்விற் கான மருத்துவர்கள் அரங்க மாநிலச் செயலாளர் டாக்டர் கருணாகரன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் அண்ணா துரை உள்பட பலர் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களை பாராட்டினர்.