tamilnadu

img

சர்வ வல்லமை படைத்த மார்க்சியம் யுக யுகாந்திரமாய் நீடிக்கும்!

மார்க்ஸ் அறிவுச்செல்வத்தை உள்வாங்கி தனது சிந்த னைகளை பிரதிபலித்தார் என அவரது  உற்ற தோழர் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டிருக்கி றார். மார்க்சின் இறுதி நிகழ்ச்சியில், தொழிற்சங்கத் தலைவர்கள், மார்க்ஸ் குடும்பத்தினர் உட்பட 13 பேர் தான் கலந்து கொண்டனர்.  அப்போது ஏங்கெல்ஸ் ஆற்றிய இரங்  கல் உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. “மார்க்ஸ் சிந்தனை யுக யுகாந்திரமாக நீடிக்கும்” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை. மார்க்ஸ் மறைந்து 140 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், இன்றும் அவரது சிந்தனைகளை நாம்  கொண்டாடுகிறோம். அவரது உண்மைச் சிந்தனைகள் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதற்கு பல்லாயிரக்கணக்கான இடங்களில் நாம் நடத்தும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளே ஆதாரம். உலகத்தில் மார்க்சியத் தத்துவம் தாக்கம் செலுத்தாத துறையே இல்லை  என புரட்சியாளர் லெனின் குறிப்பிட்டார்.  மார்க்ஸ் தத்துவத்தை புறக்கணித்துவிட்டு, நம்மால் அறிவியல்ரீதியாக எதையும் பார்க்க முடியாது. 

வேலையின்மை, கடன் தொல்லை களால் முறைசாரா தொழிலாளர்கள் எண்  ணற்றோர் தற்கொலை செய்து கொண்ட னர் என தொடர்ந்து வெளியாகும் விபரங்  கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு  ஆண்டும் உலகத்தில் 20, 30 பில்லிய னர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார் கள். முதலாளித்துவம் ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகளை நிகழ்த்துகிறது? முதலாளித்துவத்தால் ஏற்படும் இந்த  ஏற்றத்தாழ்வுகள் குறித்து, மார்க்ஸ் தத்து வத்தைப் பயன்படுத்தி பொருளாதார அறி ஞர் தாமஸ் பிக்கெட்டி ஆராய்ச்சி மேற்  கொண்டார். மார்க்ஸ் குறிப்பிட்ட வர்க்கப்  போராட்டத்தை அவர் ஒப்புக் கொண்டார்.  வர்க்கம் என்பது காலம் காலமாக உள்ளது.  ஆனால் வர்க்கம் இருப்பது மட்டுமல்ல; வர்க்கங்களுக்கு இடையேயான போரா ட்டம் காலங்காலமாக தொடர்கிறது என் பதுதான் மார்க்சின் கண்டுபிடிப்பு. மார்க்ஸ் தத்துவம் சர்வ வல்லமை (Omnipotent) கொண்டது என்று ஒரே வரியில் சொன்னார் லெனின். அதில் எல்லா  ஆற்றலும், தத்துவங்களும் உள்ளன  என்றார். அது ஏன் ‘சர்வ வல்லமை’  படைத்தது என்பதற்கான காரணத்தை யும் ஒற்றை வரியில் சொன்னார் லெனின்: “ஏனென்றால் அது உண்மை!” மார்க்ஸ்  தத்துவம் உண்மையை மட்டுமே கொண்ட தால் அது சர்வ வல்லமை படைத்தது. வறு மைக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் காரணம்  முதலாளித்துவம்தான் என்ற உண்மை யை கூறியவர் மார்க்ஸ். மார்க்சியத் தத்துவம் ஏராளமான எதிர்ப்புகளை தாங்கிக் கொண்டு இன்  றைக்கு சர்வ வல்லமையோடு பயணிக்கி றது.  உண்மை பல நேரங்களில் தோற்க டிக்கப்படும். ஆனால் அது நிரந்தர தோல்வி  அல்ல. அதே போன்று மார்க்சிய தத்து வத்தின் தோல்வியும் தற்காலிகமானதே தவிர, நிரந்தரமானது அல்ல. சதிகாரர்  கள் ஏற்படுத்திய வீழ்ச்சி, முதலாளித்து வம் ஏற்படுத்திய சதிகளை கடந்து மார்க் சிய தத்துவம் வெற்றி பெற்றுக் கொண்டி ருக்கிறது. இளைஞர்களிடையே மார்க்  சிய சிந்தனை வளர்ந்து கொண்டிருக்கி றது. மார்க்ஸ் சிந்தனை வலதுசாரி, பிற்  போக்கு மற்றும் பாசிச சக்திகளை நிச்ச யம் முறியடிக்கும்”.

மாமேதை 140 ஆவது நினைவுதினத்தையொட்டி மதுரை தீக்கதிர் வளாகத்தில் உள்ள மார்க்ஸ் சிலைக்கு மரியாதை செலுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  என்.குணசேகரன் ஆற்றிய உரையிலிருந்து