tamilnadu

பழைய ஓய்வூதியம்: முதல்வருக்கு கோரிக்கை

சென்னை,பிப்.28- ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியமே வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதைபோல் தமிழ்நாடு முதலமைச்சரும் அறிவிக்க வேண்டும் என்று அரசு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டு கோள்விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை  ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் எஸ். ஜெகதீசன், பொரு ளாளர் கே.கர்சன் ஆகியோர்  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்கு வரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதா ரம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு  முதல் இந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் என்ற பெயரில் புதிதாக ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இத்திட்டத்தின்படி இதுவரைக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இத்திட்டம் முற்றிலும் ஊழியர்கள் நலனுக்கு எதிரானது. எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இத்திட்டம் ரத்து  செய்யப்படவில்லை. ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய  ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப் படும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அந்த  மாநில முதலமைச்சர் அறிவித்திருக்கி றார். எனவே, புதிய பங்களிப்பு ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அதற்கான அறிவிப்பை நடப்பு பட்ஜெட்  கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதலமைச் சரும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.