tamilnadu

img

செல்போன் பயன்பாடும்... குழந்தைகளும்...

ஒரு நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல் தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகெங்கிலும் உள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது 

ஸ்மார்ட்போன் பயன்பாட்டில்  இந்தியாவில் 22 சதவீத குழந்தைகள் இணைய அச்சுறுத்தலை அனுபவித்துள்ளனர். இது உலகளாவிய சராசரியான 17 சதவீதத்தை விட 5 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட மெக்காஃபி ஆய்வில், மொபைல் “மெச்சூரிட்டியை” அடைவதில் இந்தியக் குழந்தைகள் மற்ற நாட்டிலுள்ள குழந்தைகளைக் காட்டிலும் மிகவும் இளையவர்கள். 
இந்தியாவில் 10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட 7 சதவீதம் அதிகம்.

உலகளவில் 90 சதவீத பெற்றோர்கள் ஆன்லைனில் பாதுகாப்பாளர்களாக தங்கள் பங்கை அங்கீகரிக்கின்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களில் 56 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க கடவுச்சொல்லையும் 42 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க கடவுச்சொற்களையும் பயன்படுத்தியுள்ளனர். 

நாட்டில் பெற்றோர்களிடையே இணைய அச்சுறுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் பற்றிய கவலையின் அளவு 47 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தான் நிதித் தகவல் கசிவுகள்  அதிகளவில் உள்ளது. 
ஒரு நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல் தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகெங்கிலும் உள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகம்.