அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் எனக்கு பரிச்சயமானது. திரைப்படங்களில் தொழிலாளராக, தொழிலாளர்களின் தலைவனாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளேன்.சிவப்பு மல்லி படத்தில் நண்பர் விஜயகாந்த்துடன் இணைந்து அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த படத்தில் “எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்” என்ற கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலுக்கு நாங்கள் நடித்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் நடித்த போது என்னை அறியாமலே மனதில் ஒரு மகிழ்ச்சியை கொண்டு வந்தது. சு.வெங்கடேசனின் வெற்றி எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்று தான் நமக்கு தெரிய வேண்டும். சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பவர். மதுரையின் பிரச்சனையை மட்டுமல்ல, தமிழகத்திற்காகவும் இந்தியாவிற்காகவும் பேசக்கூடியவர். அப்படியொரு ஆற்றல் மிகுந்தவர். வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால்தான் பாஜகவின் மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும். மதுரை பைக்காரா பகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து திரைக்கலைஞர் வாகை சந்திரசேகர் பிரச்சாரத்திலிருந்து