எஸ்.சி, எஸ்.டி., சிறு வணிகர்களுக்கு புதிய நுண்கடன்
அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்
சென்னை, ஏப்.27 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 கோடியில் ‘உறுதுணை’ என்ற குறு மற்றும் நுண் கடன் மானிய நிதியுதவி திட்டம் செயல்படுத்தப் படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா. மதிவேந்தன் அறிவித்தார். சட்டப்பேரவையில் சனிக்கிழமை ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானி யக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், “வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கு எட்டப்படும். அதேபோல் கல்வி மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை திறன் போன்ற செயல் திறன்கள் உயர்த்தப்படும். பட்டியலின மற்றும் பழங்குடியினரின் நலனில் கவனம் செலுத்துவதன் மூலம் சமூ கத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்க ளின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களை சமூக நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதே தொலைநோக்கு திட்டம் என்றார்.
ரூ.787 கோடியில் பணிகள்
தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு கூடு தல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், விடுதி கள், சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு வரு கின்றன. மேலும் விடுதிகள் பழுது பார்க்கும் பணி களும் நடைபெற்று வருகின்றன. அத்துடன், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலையில் உள்ள அரசு பழங்குடி யினர் உண்டு உறைவிட பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன விடுதிகள் கட்டுமான பணிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்து தல் போன்ற 727 பணிகள், 651.74 கோடி ரூபா யில் மாநில அரசின் நிதி உதவியுடன் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மேலும் பழங்குடியினருக் கான 2,356 வீடுகள் ரூ.136 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கான மாநில ஆணையத்தின் சார்பில் 5,450 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 474 மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மண்டபம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொரு ளாதார கல்வி மேம்பாட்டிற்காகவும், உரிய நலத் திட்டங்கள் வழங்கவும் நல வாரியம் கடந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிரை வண்ணார் மக்களின் சமூக பொரு ளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் 3.25 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள னர். இதுவரையில் 6969 உறுப்பினர் களுக்கு ரூ.11.76 கோடியில் உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் இந்த நல வாரியத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்க ஒதுக்கப்பட்டுள்ளது. வீடற்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.110 கோடி செலவில் ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 10 விழுக்காடு மட்டுமே பயனா ளிகளின் பங்களிப்பாகும். அதேபோல் தமிழ் நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் தற்போது வரை 16,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப் பாட்டில் உள்ள வணிக வளாகங்களில் ஆதிதிரா விடர், பழங்குடியினர் தொழில் செய்வதை உறுதிசெய்யும் வகையில் ரூ.15 கோடியில் தாட்கோ வணிக வளாக திட்டம் செயல்படுத்தப் படும். இதன்மூலம் வணிக வளாகங்களில் தொழில் தொடங்க வணிகர்களுக்கு தாட்கோ உதவிசெய்யும். பழங்குடியினர் உழவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14 கோடியில் ஐந்திணை பசுமை பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும். திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம், ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் அமைந்துள்ள தாட்கோ தொழிற்பேட்டைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோர் நவீன தொழில்கள் தொடங்க ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய ஆயத்த தொழிற்கூடங்கள் ரூ.115 கோடியில் அமைக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு தேவை யான உயர்தர மருத்துவ சேவைகள், அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே கிடைக்க வசதியாக ரூ.10 கோடியில் தொல்குடி நல்வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும். பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் நவீன வசதிகளுடன் முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஆதி திரா விடர், பழங்குடியினர் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 40 அறிவுச்சுடர் மையங்கள் கட்டப்படும். உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மற்றும் கோவையில் ரூ.80 கோடியில் நவீன வசதிகளுடன் முன் மாதிரி விடுதிகள் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசி னார்.