tamilnadu

img

கோட்டூரில் வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்கம்

கோட்டூரில் வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்கம்

திருவாரூர், ஏப்.28-  திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தானில் வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஜித் கண்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. வேலவன், வாலிபர் சங்க பணிகள், இன்றைய அரசியல் சூழல் குறித்தும் உரையாற்றி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக அஜித் கண்ணன், செயலாளராக தங்கதுரை, பொருளாளராக கவியரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வாடகை கட்டிடத்தில்  இயங்கக்கூடிய அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும். சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய சாலைக்கு மின் விளக்கும், சுற்றுச்சுவரும் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.