tamilnadu

img

பள்ளிபாளையம் மேம்பாலத்தில் விரிசல் இருப்பதாக புகார் தேசிய தொழில்நுட்ப குழுவினர் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம் மேம்பாலத்தில் விரிசல் இருப்பதாக புகார் தேசிய தொழில்நுட்ப குழுவினர் நேரில் ஆய்வு

நாமக்கல், ஜூன் 13- பள்ளிபாளையத்தில் புதிதாக திறக் கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல் இருப் பதாக புகார் எழுந்த நிலையில், தேசிய தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த குழு வினர் வெள்ளியன்று ஆய்வு மேற் கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சுமார் 424 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிக் காலத்தில், மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஈரோட்டில் இருந்து திருச் செங்கோட்டை இணைக்கும் வகையில் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், பல மாதங்க ளாக பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. பல்வேறு தரப் பினரின் கோரிக்கையை ஏற்று, கடந்த மே 29 ஆம் தேதியன்று இப்பாலத்தினை  தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை யிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது, பாலத் தில் ஆங்காங்கே பழுதுகள் இருப்பதாக வும், பாலம் முறையாக கட்டப்பட வில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அப்போதே அமைச்சர் மதிவேந்தன், ஆட்சியர் உமா மற்றும் பாலம் கட்டுமானப்பணி அதிகாரிகள், பாலம் தரமான முறையில் இருப்பதா கவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருந்த போதும் முறை யான ஆய்வு மேற்கொள்ளப்படும் என வும் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் வெள்ளியன்று முதற்கட்டமாக மேம்பால ஒப்பந்த தாரர்கள் சார்பில், பாலத்தின் உறுதித் தன்மைகள் குறித்தும், கான்கிரீட்டுக ளின் உறுதித்தன்மை குறித்து இயந்தி ரத்தின் மூலம் தேசிய தொழில்நுட்ப கழக (NIT) குழுவினர் பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மூன்று பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து, பாலத் தில் பல்வேறு பகுதிகளில் பாலத்தின் உறுதித் தன்மை, பாலத்தின் அழுத்தம் ஆகியவைகளை கருவிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த வாரத்தில் உயர் அதிகாரிகள் கொண்ட  குழுவினர் பாலத்தில் ஆய்வு மேற் கொள்ள உள்ளனர், என்பது குறிப்பிடத் தக்கது.