திருவில்லிபுத்தூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் வட்டாட்சியர், .எம்.ரங்கசாமி தலைமையில் /நகராட்சி ஆணையர், இராசமாணிக்கம் முன்னிலையில், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மல்லி ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர்,பாலகிருஷ்ணன், கல்லூரி முதல்வர், டாக்டர். மல்லப்பராஜ், ஆனந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், ஆனந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.