tamilnadu

img

மூடநம்பிக்கைகளுக்கு சிம்மசொப்பனமான நரேந்திர தபோல்கர்

நரேந்திர தபோல்கர் 1945ஆம்‌ ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் நாள் பிறந்தார். இவர் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை  1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தியவர்.  அந்த  இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார் களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி உள்ளார். தற்போது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்த லுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் உற்ற நண்பர் தான் தபோல்கர். மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளை யும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் ஒரு மருத்துவர். சமூகத்தை அறிவியல்  மனப்பான்மையுடன் வளர்ப்பதில் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவ சேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு  எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநி லத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவது அப்படி ஒன்றும் எளிதல்ல. தபோல்கர் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் மக்கள் மன்றத்தில் சாமியார்களை, மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். மராட்டிய மாநில அரசு, மூடநம்பிக்கைகள் மற்றும் போலி சாமியார்களுக்கெதிராக ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. அத்தகைய சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு நெருக்கடி யை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போராட்டங் களை இவர் தொடர்ந்து நடத்தி வந்தார். சாதனா  என்ற முற்போக்கு பத்திரிகையையும் நடத்தி வந்தார். தெய்வங்களுக்கு காணிக்கை என்ற பெயரில் செல்வத்தை நாசமாக்குவது மற்றும்  தெய்வங்களை நீரில் கரைத்து பொதுப் பயன் பாட்டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவது போன்றவற்றுக்கு எதிராகவும் பல இயக்கங் களை எடுத்திருக்கிறார். எனவே இவருக்கு எதிரிகள் போலி சாமியார்கள் மட்டுமின்றி இந்து மத வெறியர்களும்தான். மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதா தொடர்பாக டாக்டர் நரேந்திர  

தபோல்கரை எதிர்த்து  மிரட்டல் விடுத்திருந் தார் சங்கராச்சாரியார் நரேந்திராச்சார்யாஜி மகராஜ். மேலும் நாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புகளையும், அவர்கள் நடத்தும் சாதி ஆணவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார். அந்த வகையில் சாதி வெறியர்களின் கோபத்துக்கும் தொடர்ந்து  ஆளாகி வந்தார். பரிவர்த்தன் என்ற பெயரில் போதை அடிமைகளை மீட்டு எடுக்கும் மையம்  ஒன்றை தனது சொந்த ஊரான சதாராவில் நடத்தி வந்தார். சதாரா நகரின் மக்கள் மத்தியில் தபோல்கருக்கு நல்ல மரியாதை இருக்கிறது. புனே நகரில் மருத்துவர் நரேந்திர தபோல்கரின் வழக்கமான நடை பயணத்தின் போது 20.08.2013 அன்று காவிக் கூட்டங் களால் படுகொலை செய்யப்பட்டார். அதை யொட்டி மக்கள் தாமாகவே முன்வந்து கடை களை அடைத்துள்ளனர். அவரது வீட்டுக்கு வந்த மக்கள் மிகுந்த கோபத்துடன் ஆங்காங்கு  சேர்ந்து மௌன ஊர்வலம் சென்றனர். அறு பது வயதை தாண்டிய பிறகும் ஓய்வெடுக் காது, ஏதேனும் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவராக உட்கார்ந்து கொண்டு சம்பாதிப் பதை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், சமூ கத்தின் நல்வாழ்விற்காக, சமூகத்தின் அறி வியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த தபோல் கருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினை வஞ்சலி  என்பது, அவர் போராடிய பாதையில் தொடர்ந்து போராடுவதிலும், அதில் குறிப்பிடத் தக்க அளவில் வெற்றி பெறுவதிலும் தான் இருக்கிறது. - பெரணமல்லூர் சேகரன்