tamilnadu

img

நாமக்கல் : 408 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் ஒப்படைப்பு

நாமக்கல், ஆக.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற விடுதலையின் பவளவிழாவில் 408 மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் இதழ் சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழா கருத்த ரங்கம் ஞாயிறன்று சிபிஎம் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி வரவேற்புரையாற்றினார். இதில், “விடுதலை கனவும், இடது மாற்றும்” என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், “விடு தலை போராட்டமும், மத நல்லிணக்க மும்” என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் கருத்துரையாற்றினர். இதையடுத்து மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான ஆண்டு சந்தாக்கள் ஈரோடு 185, நாமக்கல் 117, கிருஷ்ண கிரி 75, தருமபுரி 31 என மொத்தம் 408  மார்க்சிஸ்ட் சந்தாக்களை மாநில செயற் குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் தலைவர்கள் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஜெயராமன், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, கே.தங்கமணி, சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் நன்றி கூறினார்.

;