போபால்,பிப்.9- மறைந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகம் மற்றும் அவரது பெயரில் இசைப்பள்ளி அமைக்கப்படும் என்று மத்தியப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6 ஆம் தேதி மும்பையில் மரணமடைந்தார். மறைந்த லதா மங்கேஷ்கர் நினைவாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய அனைத்து பாடல்கள் விவரங்கள் மற்றும் அவரது புகைப்படங்கள், வாங்கிய விருதுகள் ஆகியவை இடம்பெற உள்ளன. அத்துடன் இந்தூரில் லதா மங்கேஷ்கர் பெயரில் இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளது.