இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவு
மும்பை, மே 19 - வாரத்தின் முதல் வணிக நாளான திங்களன்று (மே 19) பங்குச் சந்தைகள் சரி வைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 270 புள்ளி களும், நிப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. குறிப்பாக ஐடி துறை பங்குகள் கடுமையாக சரிந்தன. நுகர்வோர் பொருள்கள் துறை, எண் ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
கொலை வழக்குகள் குறைந்தன
சென்னை, மே 19 - கடந்த 12 ஆண்டுகளை விட 2024-இல் கொலை வழக்குகள் குறைந்துள்ள தாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள் ளார். 2012-இல் மாதத்துக்கு சராசரியாக 161 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இது 2021-இல் மாதம் 130 ஆக குறைந்தன. 2025 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கொலை குற்றங்கள் 120 ஆக குறைந்துள்ளன.
உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம், மே 19 - நாகை மாவட்டம், வேதாரண்யம் தெற்கு கட லோரப் பகுதியில் சனிக் கிழமை முதல் பலத்த சூறைக் காற்று, இடி மின்னலுடன் மழைப்பெய்து வருகிறது. இதனால், வேதாரண் யம், அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.