2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு திருநங்கை நலனுக்காக ரூபாய் 1400 மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் மிகவும் எதார்த்தமான மதிப்பீடுகளின்படி இன்று அவர்களின் எண்ணிக்கை சுமார் 1.22 கோடி. அப்படி என்றால் ஒரு நபருக்கு ரூபாய் 56/- என்பது எவ்வளவு பரிதாபகரமானது.
2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் வெளியான அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் LGBQT+ (Lesbian, Gay, Bisexual,Queer Transgender +) சமூகத்திற்கு நம்பிக்கை ஊட்டின.ஆனால் மத்திய பட்ஜெட்டில் அது குறித்து வெளியான ஒதுக்கீடுகள் அவநம்பிக்கையை அளித்தன. குறிப்பாக கடந்த ஆண்டு உச்சநீதி மன்றத்தில் திருமண சமத்துவத்திற்கு எதிராக இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் எடுத்த கடுமையான நிலைபாட்டிற்கு பிறகு இந்த சமூ கத்தினர் தொடர்பான உரிமைகள் மீது அரசாங்கத் தின் அணுகுமுறை மாறும் என்பதற்கான அறி குறி ஏதுமில்லை. ஆயினும் பாஜகவின் சொந்த அறிக்கையில் திருநங்கைகள் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது. மோடி 3.0 அரசாங்கத்தில் அது குறித்து முன்னேற்றங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையைத் தூண்டியது. ஆனால் பட்ஜெட்டில் இந்த சமூகத்தினர் குறித்த அறிவிப்புகள் பிரதானமாக எதுவும் இல்லை. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் அமைச்சகத்தின் திருநங்கைகள் நலனுக்கான விரிவான மறுவாழ்விற்காக, விளிம்புநிலை மக்க ளுக்கான வாழ்வாதார மற்றும் நிறுவனங் களுக்காக உதவியளிக்கும் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது என்ற சிறு குறிப்பு மட்டுமே இருந்தது.கரிமா கிரஹாஸ் (தங்குமிடம், இல்லங்கள்) திருநங்கைகளுக்கான தேசியக் கவுன்சில் ஆகியவற்றுக்கான நிதி அளிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான திட்டங்களுக்கு நிதி வெட்டு!
திருநங்கைகள் நலனுக்காக 2024ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 52. 91 கோடி ரூபாயிலிருந்து 2025ஆம் ஆண்டில் 68.46 கோடியாக உயர்த்தப்படும் என ஏட்டில் மட்டும் அறிவிப்பு வெளியானது. ஆனால் 2024ஆம் ஆண்டில் உண்மையாகச் செலவு செய்தது 22.81 கோடி ரூபாய் ஆகும். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பெரும்பாலான கரிமா கிரகங்கள் மூடப்பட்டன. திருநங்கைகளுக்கான தேசியக் கவுன்சில் செயல்படாமல் முடங்கியது. உத்தரவாதத்திற்கும் செயல்பாடுகளுக்கும் இடையே மிகப்பெரும் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
தோல்வியடைந்த மோடி உத்தரவாதம்!
2024 ஆம் ஆண்டின் பாஜகவின் வாக்குறுதி யான சப்கா சாத், சப்கா விகாஸ் (எல்லோருக்கும் எல்லா வளர்ச்சியும்) என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று? பட்ஜெட்டில் அது ஒதுக்கியுள்ள குறை வான நிதியில் இந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற போகிறது?கரிமா இல்லங்களை கட்டும் மோடியின் உத்தரவாதம் என்ன ஆயிற்று? மோடி அரசின் புறக்கணிப்புக்கு ஸ்மைல் (SMILE - Support for Marginalised Individuals for Livelihood and Enterprise) திட்டம் மட்டும் தான் பலியானதா? தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டையும் அது வெட்டி விட்டது. 2024 ஆம் நிதி ஆண்டில் ரூ.3079.77 கோடியிலிருந்து 2025 ஆம் ஆண்டில் ரூ.2892 கோடியாக அதைக் குறைத்திருப்பது கவலை அளிக்கிறது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவது, பாலியல் ரீதியில் பரவும் நோய்த் தொற்றைத் தடுப்பது ஆகிய இரண்டிலும் இந்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு (NACO) துறை சீரிய பணியாற்றி வருகிறது. பொது சுகாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பல வருடங்கள் முன்னேற்றம் இருந்தாலும் கூட எச்ஐவி தொற்று நோயை எதிர்கொள்ளும் சவால்கள் முறியடிக்கப்படவில்லை.மேலும், தனித்துவமான மன ரீதியான உளவியல் சவால் களையும் இந்தப் பிரிவினர் எதிர்கொள்கின்றனர்.
பெருகிவரும் எச்ஐவி மற்றும் பாலியல் தொற்று நோய்
இந்தியாவில் இன்று 2.4 மில்லியன் பேர் எச்ஐவியுடன் வாழ்கின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் சிகிச்சை பெற முடியாத நிலை.மேலும் ஐந்து லட்சம் பேர், இந்த நோயால் பாதித்து இருப்பது தெரியாமல் வாழ்கின்றனர். வயது வந்தோரில் சுமார் ஆறு சதவீதம் பேர் பாலியல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நாகோ(NACO)கடைசியாக வெளியிட்ட நம்பகத் தன்மை வாய்ந்த அறிக்கை கூறுகிறது. 15 வயது முதல் 29வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத ஆண்களில் 23.3 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணைகளை கொண்டுள்ள னர் என்று 2019-21 ஆண்டுக்கான வெளி யான மிக சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது. ஆபத்தான பாலியல் பழக்க வழக்கங்கள், ஆணுறை பயன்பாடு இல்லாததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங் களிலும் இந்த தொற்று நோய் பரவுகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையில் எச்ஐவி தடுப்புக்கு மட்டுமல்லாமல் பாலியல் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை மோடி அரசாங்கம் குறைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.
பாலின சிறுபான்மையினரின் உரிமைகள் பறிப்பு!
பட்ஜெட் ஒதுக்கீட்டில் இவர்கள் நலனுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்துவது மோடி அரசாங்கத்தின் தவறான முன்னுரிமைகளை மட்டுமல்ல கருத்தியல் வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் வளங்களின் மீது அவர்களின் சமஅளவு பங்கிற்கான உரிமை யையும் இது குறைக்கிறது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4.9 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். விகிதாச் சாரத்தில் இது மிகவும் குறைவான கணக்கெடுப்பு என்றாலும் கூட 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு திருநங்கை நலனுக்காக ரூபாய் 1400 மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் மிகவும் எதார்த்தமான மதிப்பீடுகளின்படி இன்று அவர்களின் எண்ணிக்கை சுமார் 1.22 கோடி. அப்படி என்றால் ஒரு நபருக்கு ரூபாய் 56/- என்பது எவ்வளவு பரிதாபகரமானது. எந்த ஒரு பாலினமாக இருந்தாலும் இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சமீபத்திய வெற்றிகளால் உற்சாகமடைந்த இளம் பாலினச் சிறுபான்மையினர், பள்ளி களில் அவர்கள் துன்புறுத்தப்படாமல் நடத்தப் படும் சூழ்நிலை உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருப்பதாக நம்புகின்றனர். இந்த பாதுகாப்பான சூழல் இளம் LGBQT+ பிரிவி னரிடையே தற்கொலை விகிதங்கள் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு மிகவும் துணைபுரியும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமமான அளவிற்கு அவர்களுக்கு வாய்ப்புகளைப் பெற்றி டவும் உத்தரவாதம் அளிக்கும்.
அரசியல் ஆதரவின் முக்கியத்துவம்
தங்களின் தேர்தல் அறிக்கையில் எழுப்பிய நான் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்களுக் காக அவர்தம் உரிமைகளுக்காக நாடாளு மன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என நம்புகிறேன். பாஜகவின் தேர்தல் அறிக்கை களில் இதை இணைப்பதற்கு பணியாற்றிய அர சாங்கத்தின் உயர்பெறுப்பில் இருப்பவர்கள் இனிமேலாவது தங்களின் தவறுகளை உணர்ந்து அனைவரையும் உள்ளடக்கிய நல்ல ஒரு எதிர்காலத்தைப் பெற ஒன்றிணைந்து செயல் படுவார்கள் என இன்னமும் நம்புகிறேன்.
அரசியல்படுத்தவேண்டும்
LGBTQ+ பிரிவினர்கள் தங்கள் உரிமை களுக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாக நீதிமன்றத்தை நீண்ட காலமாக நம்புகிறார்கள். புதிய அரசியல் முன்னுதாரணங்களை நாம் வழி நடத்தும் போது இந்த பிரிவினரின் இயக்கம் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடிய வரலாற்றை உரு வாக்குவது முக்கியம். 1988இல் காமத்திபுராவி லிருந்து அப்போதைய முதல்வர் சரத்பவார் இல்லம் வரை கந்துவட்டிக் காரர்களிடமிருந்து பாதுகாப்புக் கோரி திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் ‘நாம் தேவ்தசல்’ அணிவகுப்பை நடத்தினர். 1998ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சோகாக்பூரில் இருந்து இந்தியாவின் முதல் திருநங்கையாக எம்.எல்.ஏ சப்னம் மௌசி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020இல் மகாராஷ்டிராவில் திருநங்கை களுக்கான நல வாரியம் நிறுவப்பட்டது. சமீபத்தில் பெற்ற வெற்றிகள், நீதித்துறையின் முற்போக்கான மாற்றங்களின் மூலம் உரு வான சமூக அழுத்தங்களால் 2024 தமிழ்நாட்டில் LGBQT+ குறித்த கொள்கை உரு வாக்கப்பட்டது. சிவில் சமூகத்தினரின் தொடர்ந்த போராட்டங்கள், நிர்வாக ரீதியிலும் நல்ல மாற்றங்களை இவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும். ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் என எல்லோரும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது அவர்களுக்கான ஏட்டில் உள்ள உரிமைகள் நடைமுறையிலும் திறம்படச் செயல்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய முடியும். எல்ஜிபிடிஜி+ மக்கள் வாழ்க்கையிலும் நல் மாற்றங்களை கொண்டுவர முடியும்.
நன்றி : தி இந்து 22/8/24
தமிழில்: கடலூர் சுகுமாரன்