tamilnadu

img

5 ஆண்டுகளில் 1 கோடியே 76 லட்சம் குடும்பங்களை நீக்கிய மோடி அரசு

5 ஆண்டுகளில் 1 கோடியே 76 லட்சம் குடும்பங்களை நீக்கிய மோடி அரசு

கிராமப்புற வேலை உறுதித் திட்டம்

புதுதில்லி, ஜுன் 3 - மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலைபெறுவோர் பட்டியலிலிருந்து ஐந்து ஆண்டுகளில் 1.76 கோடி குடும்பங்களை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டையும் பெரு மளவில் குறைத்துள்ளது. ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு 2020-21 நிதியாண்டில் ரூ. 1.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டபோது, 7.55 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக இருந்தன. ஆனால், 2024-25 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு ரூ. 85 ஆயிரத்து 680 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை யையும் 5.79 கோடி குடும்பங்களாகக் குறைத்துள்ளனர். ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ. 25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டதோடு, 1.76 கோடி குடும்பங்கள் நீக்கமும் செய்யப்பட்டுள்ளன. தற்போது, ஆண்டுதோறும் 100  நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக் கிறது. இதை 200 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உத்தரவாத ஊதியத்தை ரூ. 600 ஆக உயர்த்த  வேண்டும் என்றும் தொழிற்சங்கங் களும் எதிர்க்கட்சிகளும் கோரு கின்றன. கேரளம் உள்ளிட்ட மாநி லங்களும் அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு திட்ட ஒதுக்கீட்டை அதி கரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. உண்மையில், நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தேவைப் படுகிறது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதிக் குழுவிடம் ரூ. 5.23 லட்சம் கோடியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், 2020 முதல் 2025ஆம் ஆண்டு வரை  ரூ. 4.69 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டது. மாறாக, நிதி ஒதுக்கீட்டில் 12 சதவிகித அதிகரிப்பு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதனை அங்கீகரிப்பதாக இல்லை.