கேரளா 6 ஆண்டுகளாக எரிபொருள் வரியை உயர்த்தவில்லை: நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்
திருவனந்தபுரம், ஏப்.28- நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் எரிபொருள் வரியை குறைக்கவில்லை என்கிற பிரதமர் மோடியின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளாக எரிபொருள் வரியை உயர்த்தவில்லை; வரியை உயர்த்தாத மாநிலங்கள் எப்படி குறைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாநிலங்கள் மீதான பிரதமரின் அவதூறுக் கருத்துக்கு பதிலளித்துள்ள கே.என்.பாலகோபால், “ஒன்றிய அரசு எரிபொருள் வரியை உயர்த்தி வருகிறது. அவர்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவற்றை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். மாநிலங்களின் அதிகாரத்தை ஒன்றிய அரசு பறிக்கிறது. எரிபொருள் விலையில் ஒன்றிய அரசு விதித்துள்ள கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். மாநிலங்கள் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என்கிற ஒன்றிய அரசின் நிலைப்பாடு கூட்டாட்சியை குழிதோண்டிப் புதைப்பதாகும். பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பிரதமர் விமர்சிக்கிறார். பிரதமரின் இந்த வார்த்தைகள் கவலை அளிக்கிறது; பொறுப்பில் இருக்கும் அவரைப் போன்ற எவரும் இவ்வாறு பேசக்கூடாது” என்றும் கூறினார்.
சென்னை,ஏப்.28- பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக பிரதமர் பேசியுள்ளது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மக்கள் மீதான பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை குறைப்பதற்காக, கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது. இதேபோன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியை குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் போய்ச் சேர உதவ வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண் டது. சில மாநிலங்கள் வரியை குறைத்தன. ஆனால், சில மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை. இதன் காரணமாக, அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்த மாநி லங்களின் மக்களுக்கு செய்கிற அநீதி மட்டு மல்ல, இது மற்ற மாநிலங்களிலும் தீங்கு ஏற்படுத்துகிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சில காரணங்களுக்காகவோ, பிற காரணங்களுக் காகவோ ஒன்றிய அரசு சொன்னதைக் கேட்க வில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர்” என்றார்.
பிரதமரின் இந்தக் கருத்து எதிர்க்கட்சிகளிடை யேயும், மக்களிடையேயும் பெரும் கொதிப்பை யும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(ஏப்.28) கேள்வி நேரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, “சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதற்கான வழி வகையைக் காணவில்லை என்று பிரதமர் பேசியுள்ளார். மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், மாநில அரசுக்கு விதிக்கும் வரிகளைக் குறைக்காத காரணத்தால் தான் விலையை குறைக்க முடிய வில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்” அவரின் கருத்தைச் சொல்லி உள்ளார்” என்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே இருந்தாலும், அதற்கு ஏற்றது போல் விலையைக் குறைக்காமல், இதன் மூலம் கிடைத்த உபரி வருவாயை தனதாக்கிக்கொண்டது ஒன்றிய அரசு. கடுமையாக வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை முழுவதும் தனதாக்கி கொண்டது ஒன்றிய அரசு என்றும் முதலமைச்சர் கூறினார்.
பாசாங்கு கட்டிய மோடி!
சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் பாசாங்கு காட்டு வது போல் இந்த தேர்தலுக்கு முன்பாக வரியைக் குறைத்து வேடம் போட்டது ஒன்றிய அரசு. தேர்தல் முடிந்த பின்பு விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை உயர்த்தியது ஒன்றிய அரசு. ஆனால் தேர்தல் முடிந்த பின்பு வாக்குறுதி அளித்த படி ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாக வரியை குறைத்தது மாநில அரசு. இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மை யில் முனைப்பு காட்டுகிறார்கள், யார் குறைப்பது போல் நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் எனவும் தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.