tamilnadu

img

ரூ.20,860 கோடி நிலுவையை வழங்குக

சென்னை,ஏப்.1- தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கும் 20,860 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். நான்கு நாள் சுற்றுப் பயண மாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று(ஏப்.1) தில்லியிலுள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை  10.30 மணிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர் பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். நீதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.  அதன் விவரம் வருமாறு:-

2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழகத்திலுள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானி யமாக ரூ. 7,899.69 கோடி பரிந்துரைத் தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடை பெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு  விடுவிக்கவில்லை.  நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துக ளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதி நிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதைப்போன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20  வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழகத்திற்கு 2,524.20  கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்து ரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. 

இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானி யத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறு வதற்கான அனைத்து நிபந்தனை களை நிறைவேற்றிய போதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய  நிலையிலும், 2017-18 ஆம் ஆண்டுக் கான செயல்பாட்டு மானியம்  தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வில்லை.  இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-18 ஆம் ஆண் டிற்கான செயல்பாட்டு மானியத் தினை பெரும்பாலான மற்ற மாநிலங்க ளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. எனவே, அடிப்படை மானிய நிலுவைத் தொகையான 548.76 கோடி ரூபாயை யும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகைகள்'

கொரோனா பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகா தாரக் கட்டமைப்பை மேம்படுத்து வதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்க ளுக்கு நலத்திட்டங்களைச் செயல் படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடி யிலிருந்து மீண்டு வர, இந்த நிலு வைத் தொகையை உடனடியாக விடு விக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு  வலியுறுத்தப்படுகிறது.

பெரும் இடைவெளி!'

சரக்கு மற்றும் சேவை வரியை  அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக் கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதி காரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப் பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூ லிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது.  பெருந்தொற்றிற்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை.  இந்நிலையில், 30.6.22 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப் பீட்டுத்  தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23 நிதியாண்டில், தமிழகம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். இழப்பீடு  வழங்கும் காலத்தை, ஜூன் 2022 க்குப் பின் குறைந்த பட்சம் 2 ஆண்டுக ளுக்கு நீட்டிக்க வேண்டும்.