திண்டுக்கல் மார்ச் 25- திண்டுக்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறுபான்மையினர் வாழ்வியல் புரிந்து ணர்வு முகாம் துவங்கியது. மாநில அள வில் நடைபெறும் இந்த புரிந்துணர்வு முகா மிற்கு மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கவி வாணன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், அ. மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்ட னர். ஞாயிற்றுக்கிழமை முகாமில் சிறு பான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல கலந்து கொள்கிறார்கள். கலை மாலை நிகழ்ச்சி யில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட பல கலந்து கொள்கிறார்கள்.