tamilnadu

img

மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சிராப்பள்ளி, அக். 24, அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றி ணைத்து வெள்ளையர்களுக்கு எதிராய் படை திரட்டிய சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டி சகோதரர்களின் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் நினைவு சின்னம் அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு ஜோதி ஓட்டம் ஞாயிறு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் தொடங்கிய ஜோதி ஓட்டம் ராஜ கோபுரம் அருகில் நிறைவடைந்தது. அங்கு பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர்  சுரேஷ் தலைமை தாங்கினார்.மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் சிறப்புரையாற்றி னார்.  மாநகர் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினர். இதில் வாலிபர் சங்க நிர்வாகிகள் ரெட்டமலை,யுவராஜ், சந்தோஷ், சோலை, சந்துரு, மூகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;