திருவனந்தபுரம், மே 8- திருமணத்துக்குள் கேஸ் விலை 3 ஆயிரம் ஆகி விடுமோ? சமையலறையை பூட்ட வேண்டியதாகி விடுமோ? இப்படி மோடியை நோக்கி கேள்விக்கணை தொடுத்திருப்பவர் திருவ னந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் தாயார். இதுகுறித்து ஆர்யா தனது முகநூல் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: காலையில் கிளம்பும் போது அம்மா பதற்றத்துடன் கேட்டார், ‘டேய் ஒரு கேஸ் உருளைக்கு 1006 ரூபாய் ஆகிவிட்டது, இப்படியே சென் றால் உன் திருமணத்துக்குள் கேஸ் விலை 3 ஆயிரம் ஆகி விடுமே மகளே? சமையல றையை பூட்டி வைக்க வேண்டி வருமோ? என்று. ‘அச்சா தின் வருகிறது என்பதால்தான் அம்மா’ என்று கூறிவிட்டு அவசர மாக கிளம்பினேன். ஆனாலும், அம்மா கூறிய அந்த பிரச்சனை அதோடு விடக்கூடியதாக இருக்க வில்லை. ஒரு குடும்பத்தின் பொருளாதார அடிப்படை அடியோடு தகர்ந்து போகும் விதமாக சமையல் எரிவாயு விலையும் அன்றாட பயன் பாட்டுக்கான பொருட்களின் விலையும் உயர்ந்து வரு கின்றன. பொருட்களின் விலை உயர்வு எரிபொருள் விலை உயர்வின் நேரடி விளைவாகும்.
வேலையின்மை முன்பை விட கடுமையாவதாக செய்தி கள் தெரிவிக்கின்றன. தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக் கடியை இப்போது சந்திக் கின்றன. ஒன்று அல்லது இரண்டு காலியிடங்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் அல் லது அதற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கின்றனர். பலர் தேவையான கல்வித் தகுதிக்கு மேல் தகுதி பெற் றுள்ளனர். ஒருவேளை நாம் கேரளா வில் இருப்பதால், இந்தக் துய ரங்களின் தீவிரம் நமக்குத் தெரியாது என்பதில் சந்தேக மில்லை. இங்கு மாநில அரசு, சந்தை உட்பட பல்வேறு வழி களில் தலையிட்டு பண வீக்கத்தை ஓரளவு கட்டுப் படுத்த உதவுகிறது. பல்வேறு நலத்திட்டங் கள் மூலம், சிறிய தொகை யாக இருந்தாலும், ரொக்க மாக மக்களைச் சென்றடைய வைக்க முடிகிறது. எந்த வேலையையும் சாத்திய மாக்கும் அமைதியான சமூ கச் சூழல் இங்கு உள்ளது. இப்படியெல்லாம் இருந்தும், எவ்வளவு காலம் பணவீக் கத்தை இப்படியே தாங்கிக் கொள்ள முடியும்? என ஆர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.