கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் அமைப்புக்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிபிஎம் கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ், சிஐடியு ஹோட்டல் சங்க நிர்வாகி சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.