சென்னை,டிச.21- பாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் போராடிய பெண் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல் பட்டுவரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும்
பாக்ஸ்கான் நிறுவனத்தில் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததனால் பலர் மயக்கமடைந்து வாந்தி பேதி ஏற்பட்டு ஆபத்தான சூழ்நிலை யில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதில் சிலர் இறந்து விட்டதாக கூறப்பட்ட வதந்தியால் பதற்றமடைந்த பெண் தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராடும் பெண் தொழி லாளர்களுக்கு ஆதரவாக காஞ்சி புரம் மாவட்ட தொழிற்சங்க தலை வர்கள் முத்துக்குமார், பகத்சிங் தாஸ் உட்பட பலர் சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை கண்மூடித்தனமாக தாக்கி இழுத்து சென்று கைது செய்துள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டிக்கிறது. போராட்டத்திற்கு பிறகு பாக்ஸ்கான் நிறுவனம் தற்காலிக மாக மூடப்பட்டு, விடுதிகளும் மூடப்பட்டு விட்ட சூழ்நிலையில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வீட்டிற்கும் செல்ல முடியாமல் வெளியில் தங்குவதற்கும் உரிய ஏற்பாடும் இல்லாமல் அல்லல்பட்டு கொண்டுள்ளனர். எனவே உடனடியாக பாக்ஸ்கான் நிறுவனத்தையும் விடுதிகளையும் திறக்க வேண்டும். அங்கு வேலை செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் தங்கியிருக்கக் கூடிய விடுதிகள் தரமானதாக போதுமான வசதிகளோடு செயல் படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிற்சங்க தலைவர்களை தாக்கிய காவல்துறை கண்காணிப் பாளர் மற்றும் காவல்துறை யினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் தொழிலாளர்கள் போராட க்கூடிய இடத்தில் அதிக அளவில் ஆண் காவலர்கள் பெண்களை கட்டுப்படுத்துவதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டது முறை யற்றது. அவ்வாறு பணியில் ஈடுபடு வதற்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். போராடிய தலைவர்கள் மீதும் பெண் தொழிலாளர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.