சென்னை, செப். 9 - திரைக்கலைஞர் விஜய லட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று (செப்.9) இணை ஆணையர் சீனிவாசனை சந்தித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா, பொருளாளர் மருத்துவர் வ.பிரமிளா ஆகி யோர் அளித்த மனுவின் சுருக்கம் வருமாறு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தம்மை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் திரைக்கலைஞர் விஜய லட்சுமி புகார் அளித்துள் ளார். தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி விஜயலட்சுமியை சீமான் தகாத வார்த்தைகளால் மிக தரக்குறைவாக பேசு வது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் சீமான், ஒழுங்கீனத்தோடு செயல்படுவது இளம் தலைமுறைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். தமிழ கத்தில் இருக்கக்கூடிய பெண் அரசியல் தலைவர் கள் குறித்து தவறாக பேசு வது, பெண்களை இழிவு படுத்த கூடிய வகையில் பொதுவெளியில் பிற்போக் கான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். எனவே, காவல்துறை விஜயலட்சுமி புகார் மீது உரிய பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து, விரைந்து நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. இந்நிகழ்வின் போது மாவட்டச் செயலாளர்கள் ம.சித்ரகலா (தென் சென்னை), வி.தனலட்சுமி (மத்திய சென்னை), வடசென்னை பொருளாளர் பூங்குழலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.