மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதத்தையும் அரசியலையும் பிரிக்கவும், அதை திறம்பட செயல்படுத்த தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நிறைவேற்றவும் செயல்படுத்தவும் உறுதியாக நிற்கிறது. வகுப்புவாத வன்முறைகள் கடுமையாக எதிர்கொள்ளப்பட வேண்டும். மதச்சார்பற்ற விழுமியங்கள், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு ஆகியவற்றை அரசின் அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்த வேண்டும். இதற்கென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்கண்டவற்றை நோக்கி செயல்படும்:
* குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
* சிறுபான்மையினரை குறிவைக்கும் வகையில் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
* பாஜக அரசால் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களை நீக்க வேண்டும்.
* பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை தாக்கி வகுப்புவாத வெறுப்பை பரப்பும் அனைத்து சட்டவிரோத தனியார் ஆயுதக்குழுக்கள் மற்றும் பல்வேறு ‘சேனா’ போன்ற கண்காணிப்பு குழுக்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். வகுப்புவாத வெறுப்பைப் பரப்புதல் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், கட்டுப் படுத்துவதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை இயற்றுதல்; கும்பல் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.
* வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு அவர்களின் பொது அல்லது அதிகாரப்பூர்வ அந்தஸ்தை பொருட்படுத்தாமல் முன் மாதிரியான தண்டனையை உறுதி செய்தல்.
* சிறுபான்மையினர் எவ்வித அச்சமும் பாகுபாடும் இன்றி சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் வாழும் வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
* உயர்கல்வியில் உள்ள அனைத்து பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களில் மதவாத, சார்பு மற்றும் அவதூறுப் பிரச்சார உள்ளடக்கங்களை அகற்றுதல்.