புதுதில்லி, ஜூலை 25 - மணிப்பூரைப் பற்றி பேசச் சொன்னால், கிழக்கிந்தியக் கம்பெனி பற்றி பேசுவதா? என்று பிரதமர் நரேந் திர மோடிக்கு, அகில இந்திய காங்கி ரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் அழைத்தும் நாடா ளுமன்றத்திற்கு வரமறுக்கும் பிர தமர் மோடி, நாடாளுமன்றத்திற்கு வெளியே வீராப்புப் பேச்சில் ஈடு பட்டு வருகிறார். அந்த வகையில், செவ்வாயன்று பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க் கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இந்தியா’ என்ற பெயருக்காக அவர் கள் தங்களையே புகழ்ந்து கொள்கி றார்கள். ‘கிழக்கிந்திய கம்பெனி’, ‘இந்தியன் முஜாகிதீன்’, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ போன்றவற்றி லும் கூடத்தான் ‘இந்தியா’ என்ற பெயர் இருக்கிறது. எனவே, ‘இந் தியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகி விடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது. வரும் 2024 மக்க ளவைத் தேர்தலில் மக்களின் ஆதரவு டன் பாஜக எளிதில் வெற்றி பெறும். அவர்கள் (இந்தியா கூட்டணியினர்), எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதாவது, ‘இந்தியா’ கூட்டணி யை, பயங்கரவாத இயக்கங்களில் இருக்கும் ‘இந்தியா’ என்ற பெய ரோடு ஒப்பிட்டு பிரதமர் மோடி, தனது வயிற்றெரிச்சலைக் கொட்டினார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவையில் பதில ளித்தார். அப்போது, “மணிப்பூரில் கல வரம் நடக்கிறது, மாநிலமே பற்றி எரி கிறது. அதைப்பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அவர் (மோடி) தற்போது கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்” என பதிலடி கொடுத்தார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.. மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள்தான் இந்தியா. மணிப்பூரை மீட்டெடுக்க நாங்கள் உதவுவோம்; அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைப்போம்; மணிப்பூரில் அன்பு மற்றும் அமைதியை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். இந்தியாவின் அடிப்படை கொள்கை களை மணிப்பூரில் மீண்டும் கட்டி யெழுப்புவோம்” என்று கூறியுள்ளார்.