“குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில் அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம், பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், தோல்வியைத் தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.