உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியீடு
மதுரை, மே 28- சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜூன் 2 ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு வழக்குகளை விசா ரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளி யிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றப்பட்டு பட்டி யல் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி ஜூன் 2 ஆம் தேதியில் இருந்து 3 மாதங்களுக்கு மதுரை உய்நீதிமன்ற முதல் அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகி யோர் பொதுநல மனுக்கள், கிரிமினல் அவமதிப்பு மற்றும் அப்பீல் மனுக்கள், அனைத்து ரிட் மனுக்கள், 2022 ஆம் ஆண்டு வரை தாக்கலான ரிட் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்ற னர். 2 ஆவது அமர்வில் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் அப்பீல் மனுக்கள், சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசா ரிக்கின்றனர். 3 ஆவது அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகி யோர் விசாரிக்கும் முதல் நிலை அப்பீல் மனுக்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டில் இருந்து தாக்கலான ரிட் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனர். நீதிபதி தண்டபாணி, சிவில் ரிவிஷன் மனுக்களை (தொழிலாளர் துறை, கூட்டுறவு சம்பந்தமான வழக்குகளை தவிர) விசாரிக்கிறார். நீதிபதி விவேக்குமார்சிங், 2023 ஆம் ஆண்டு முதல் தாக்கலான அரசு ஊழியர்கள் சேவை தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி சரவணன், வரி சம்பந்தப்பட்ட வழக்குகள், வனம், மோட்டார் வாகனம், அறநிலை யத்துறை மற்றும் வக்பு வாரிய வழக்கு களை விசாரிக்கிறார். நீதிபதி புகழேந்தி, கிரிமினல் வழக்கு கள் (குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகள் 407, 482 மற்றும் பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவுகள் 447, 528 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் மனுக்கள்), 2024-ம் ஆண்டில் இருந்து தாக்கலான ரிட் மனுக்களை விசாரிக்கி றார். நீதிபதி ஷமீம் அகமது, 2022 ஆம் ஆண்டு வரை தாக்கலான அரசு ஊழி யர்கள் சேவை தொடர்பான வழக்கு களை விசாரிக்கிறார். நீதிபதி இளங்கோ வன், சிவில் சிறு வழக்குகளை விசா ரிக்கிறார். நீதிபதி முரளிசங்கர், சிவில் சிறு அப்பீல் மனுக்கள் மற்றும் சிவில் 2 ஆம் நிலை அப்பீல் மனுக்களை விசா ரிக்கிறார். நீதிபதி மஞ்சுளா, சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகள் சம்பந் தப்பட்ட வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி ஸ்ரீமதி, 2018-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள கனிம வளங்கள், பதிவுத்துறை சம்பந்தப்பட்ட ரிட் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி விஜயகுமார், தொழிலாளர் தொடர் பான ரிட் மனுக்கள், சிவில் ரிவிஷன் மனுக்கள், தொழிலாளர் துறை மற்றும் கூட்டுறவு சம்பந்தமான ரிட் மனுக்கள், 2011-ம் ஆண்டு முதல் தாக்கலான 2 ஆம் நிலை அப்பீல் மனுக்களை விசா ரிக்கிறார். நீதிபதி சவுந்தர், நிலச்சட்டங்கள் தொடர்பான வழக்குகள், சுதந்திரப் போராட்ட தியாகி பென்சன் வழக்கு கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேளாண் உற்பத்தி சந்தை தொடர் பான வழக்குகளை விசாரிக்கிறார். நீதி பதி விக்டோரியா கவுரி, கிரிமினல் ரிவி ஷன் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நிறுவனங்களின் அப்பீல் மனுக்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை தாக்கலான முதல் நிலை மற்றும் 2 ஆம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி வடமலை, ஜாமீன், முன்ஜாமீன் தொடர்பான மனுக்கள், 2023 ஆம் ஆண்டு வரை தாக்கலான கிரி மினல் வழக்குகள் (குற்றவியல் நடை முறைச்சட்டப்பிரிவுகள் 407, 482 மற்றும் பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவுகள் 447,528 ஆகியவற்றின்கீழ் தாக்கலா கும் மனுக்கள்) ஆகியவற்றை விசா ரிக்கிறார். நீதிபதி அருள்முருகன், 2018 ஆம் ஆண்டு முதல் தாக்கலான 2 ஆம் நிலை அப்பீல் மனுக்கள் ஆகிய வற்றை விசாரிக்கின்றனர். இந்த தகவல் சென்னை உயர்நீதி மன்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டு உள்ளது.