சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
ஒன்றிய பாஜக அரசு பறித்து வரும் மாநில அரசாங்கத்தின் அதி காரங்களையும் உரிமைகளையும் தமிழ்நாடு மீட்டெடுக்கும் என்று சட் டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) கேள்வி நேரத்திற்கு பிறகு, மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாது காக்கவும், ஒன்றிய - மாநில அரசு களுக்கு இடையேயான உறவு களை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப் போது அவர் கூறியதாவது
போராடித் தான் பெறுகிறோம்
நமது நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்து விட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்க ளைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில், இந்த மக்க ளுக்கென்று அதைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட உரிமைகள் உள்ளன. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமை யாக வாழ்கிறோம். நம் நாட்டு மக்க ளின் நலன்களை போற்றிப் பாது காக்கும் வகையில், அதற்கான அரசி யல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத் கர் தலைமையில் உருவாக்கியவர் கள், ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றிய மாக உருவாக்கினார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்க ளின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன் றிய அரசிடம் போராடிப் பெற வேண் டிய இக்கட்டான நிலையில் இருக்கி றோம் என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கிறேன்.
தொடரும் ஏமாற்றம்
பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டை, மொழிவழி உரிமைகளின் அடிப்படையில் உருவான மாநிலங் கள் தான் ஒற்றுமையாகக் காத்து வருகின்றன. இப்படி அமைக்கப் பட்ட மாநிலங்கள் அனைத்து அதி காரங்களையும் கொண்டவையாக விளங்கினால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும். இதை உணர்ந்து, ‘மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி’ என்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற் றாண்டு காலத்திற்கு முன்பே, 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர், ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு களை ஆராயும் பொருட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.வி. இராஜ மன்னார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தார். நாட்டிலேயே முதன்முறையாக ஒன்றிய - மாநில அரசின் உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, 1971 ஆம் ஆண்டு இராஜமன்னார் குழு தனது அறிக்கையை வழங்கி யது. அந்தக் குழுவின் முக்கியப் பரிந் துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்பே, 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று- இதே சட்டமன்றத்தில் தீர்மா னமாகவும் தலைவர் கலைஞர் நிறை வேற்றினார். இதனைத் தொடர்ந்து, ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடை யிலான உறவுகளை மேம்படுத்த ஒன்றிய அரசின் சார்பில் 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா தலைமையில் ஆணையம்; 2004-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவற்றின் சார் பில் ஆயிரக்கணக்கான பக்கங்க ளைக் கொண்ட அறிக்கைகள் வழங் கப்பட்டும் இதுநாள் வரையிலும் எந்த வித மாற்றமும் இன்றி, ஏமாற்றமே தொடர்கிறது.
பாஜக அரசின் மடைமாற்றம்
அடுத்தடுத்து மாநிலப் பட்டியலி லுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகிய வற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய ஒன்றிய அர சால் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. சமூகநீதி, பொருளாதார ஏற்றத் தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோ ருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படை யில் மருத்துவக் கல்வியில் தமிழ் நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து, முழுமை யாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட் டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டு விட்டது. சிதைந்து வரும் கனவுகள் இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாரா ருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்ன டைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள் ளது. இந்த நீட் தேர்வின் காரண மாக பல மாணவர்களுடைய மருத்து வக் கனவுகள் சிதைந்து போயி ருக்கின்றன. பல மாணவர்களுடைய விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து நாம் தவித்துக் கொண்டி ருக்கிறோம். கடந்த ஒரு நூற்றாண் டிக்கு மேலாகவே, நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனை களை நோக்கி நாட்டின் பல்வேறு பகு திகளில் மட்டுமின்றி, பல உலக நாடு களில் இருந்தும் உயர்தர சிகிச்சை பெற மக்கள் வருகை புரிந்தவ ணம் இருக்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும், உயர்தர மருத் துவமனைகளையும், முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனங்களை யும் கொண்டுள்ள தமிழ்நாட்டில், தரமான கல்வி கொடுக்கப் போகி றோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வி முறையை சிதைப்ப தையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களை யும் விதமாக, இந்த சட்டமன்றப் பேர வையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது!
வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு
இதேபோல், மாநிலப் பட்டிய லில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது.
மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வி
இவ்வாறு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது.
வருவாய் அதிகாரம் பறிப்பு
ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்க ளிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் அறிமுக நிலையிலேயே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்த மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. எனினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்க ளின் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நடை முறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங் களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி, ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரும் பங்க ளிப்பை தமிழ்நாடு தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாக அளிக்கப்படுகின்றது. இது மிகமிகக் குறைவு.
தமிழ்நாட்டின் எதிர்வினை
இந்த நேரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவ மைத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய கருத்தை இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். “Both the Union and the States are created by the Constitution. Both derive their respective authority from the Constitution. The one is not subordinate to the other in its own field; and the authority of one is Co- ordinate with that of the other”. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசின் தீவிர மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும் விதமாக 2026-ஆம் ஆண்டு நடை முறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதி கள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு மிக்க தீர்ப்பு
தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, சமீபத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங் களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகை யில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றி ருக்கிறோம். அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற குடியரசுத் தலைவர்களுள் ஒருவரும், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த சட்ட மாமேதையுமான ஜேம்ஸ் மேடிசன் அவர்களுடைய கருத்தை பதிவு செய்கிறேன். “The operations of the federal Government will be most extensive and important in times of war and danger; those of the State Governments, in times of peace and security.” நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாப்பது ஒன்றிய அரசினுடைய முதற்கடமை! அந்த உயரிய நோக்கத்தினை செம்மையாக செயல்படுத்திட அனைத்து மாநிலங்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். அதேவேளையில், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநிலங்களின் பங்கு முதன்மையானது. அதற்கு ஒன்றிய அரசு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை கருத்து! ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு களை மேம்படுத்திட உயர்மட்டக் குழு அமைத்திடுவது தமிழ்நாட் டின் நலன் காக்க மட்டுமல்ல; “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அடிப்படையில் பரந்து விரிந்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காத்திடவே நாம் இன்று இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.