தமிழகத்தின் அமைதியைப் பாதுகாக்க வும், மதவெறி சக்திகளின் சவால்களை முறியடிக்கவும் மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும், உயர்த்திப் பிடிக்க வும், மனு அநீதியை மாய்ப்போம் என முழக்க மிட்டும் அக்டோபர் 11 தமிழகம் முழுவதும் மாபெரும் மனிதச்சங்கிலி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற முற்போக்கு அமைப்புகளும், வர்க்க வெகுஜன அமைப்பு களும் இந்த மனிதச்சங்கிலி இயக்கத்தில் பங்கேற்று கரம்கோர்க்க உள்ளனர். மனு அநீதியை முறியடிக்கவும் மக்கள் ஒற்றுமை யை பாதுகாக்கவும் நடைபெறும் இந்த மனிதச்சங்கிலியில் தமிழகமே பங்கேற்று கரம் கோர்க்க வேண்டியது அவசியமாகும். அக்டோபர் 2ந்தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப்போவ தாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்தது. இந்த அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது வினோதமாக இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த நாளன்று தங்களது அணிவகுப்பை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தேர்வு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர் களால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அந்த அமைப்பு இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்டது. காந்தி அடிகள் கொலைக்கும் தங்களு க்கும் தொடர்பு இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு இன்றைக்கு பசப்புகிறது. ஆனால் காந்தி அடிகள் கொலையில் குற்றம்சாட்டப் பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னோடி களில் ஒருவரான சாவர்க்கருக்கு உள்ள தொடர்பு அரசு தரப்பால் சரிவர விளக்கப்பட வில்லை என்று சமீபத்தில் இரு ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள நூலில் தெரிவுபடுத்தப் பட்டுள்ளது. மேலும் காந்தி கொலையில் பின்னால் இருந்த சதி குறித்து விசாரிக்க அரசினால் அமைக்கப்பட்ட கபூர் கமிஷனும் இதை சுட்டிக்காட்டியுள்ளது.
காந்தியடிகளை கொன்ற நாதுராம் வினாயக் கோட்சே சாவர்க்கரின் அணுக்கத் தொண்டர் என்பதில் சந்தேகம் இல்லை. சாவர்க்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல்தான் காந்தியடிகளின் கொலைக்கு காரணமாக அமைந்தது என்பது தெளிவு. மேலும் நாதுராம் வினாயக் கோட்சே யின் சகோதரர் கோபால் கோட்சே நானும், என்னுடைய சகோதரரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வளர்க்கப்பட்டவர்கள் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இப்போதும் கூட இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் காந்தியையும், காந்தியத்தையும் இழிவுபடுத்த தயங்குவது இல்லை. இந்த நிலையில் காந்தி அடிகளின் பிறந்த நாளன்று அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரியது என்பது அப்பட்டமான ஏமாற்றுவேலை. அந்த நாளில் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. மேலும் காந்தி அடிகளின் பிறந்த நாள் என்பதற்காக நாங்கள் அணிவகுப்பு நடத்தவில்லை. மாறாக, சுதந்திர தினத்தின் பவளவிழாவைக் கொண்டாட வும், அம்பேத்கரின் நூற்றாண்டைக் கொண்டாட வும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்ட விஜயதசமியை கொண்டாடவும் இந்த நாளை தேர்வு செய்ததாக ஆர்எஸ்எஸ் ஆதரவு பேர்வழிகள் விதவிதமாக விளக்க மளித்தனர். புதுச்சேரியில் இதே நாளில் பாஜக கூட்டணி அரசு ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியது மாநில அமைச்சர்களே ஆர்எஸ்எஸ் சீருடையுடன் கலந்து கொண்ட னர். அங்கு காந்தியின் பிறந்த நாள் மற்றும் வள்ளலாரின் 200வது ஆண்டை கொண்டாட அணிவகுப்பு நடத்தியதாக ஆர்எஸ்எஸ் கூறியது. அக்டோபர் 2ந்தேதி அணிவகுப்பு நடத்த இவர்கள் கூறும் காரணங்கள் அனை த்தும் பொருத்தமற்றவை. பொய்யானவை.
சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்றால் ஆகஸ்ட் 15ந்தேதி அன்று கொண்டாடியிருக்க வேண்டும். அதை விடுத்து அக்டோபர் வரை சுதந்திர தின பவளவிழாவைக் கொண்டாட காத்திருந்தது ஏன்? மேலும் இதுவரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சுதந்திர தினத்தை தேசியக் கொடியேற்றி கொண்டாட மறுத்த வர்கள்தான் இவர்கள் என்பதையும் மறந்து விட முடியாது. அடுத்து அம்பேத்கரின் நூற்றாண்டு முடிந்து 31 ஆண்டுகள் ஆகிறது. இப்போது 31 ஆண்டுகள் கழித்து நூற்றாண்டை கொண்டாடுகிறோம் என்பதில் அர்த்தம் உண்டா? மேலும் அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அந்த இடத்தில் மனு சாஸ்திரத்தை வைக்க முயலும் கூட்டத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சொல்ல அருகதை உண்டா? மேலும் இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 5ந்தேதி தான் கொண்டாடப் பட்டது. விஜயதசமி நாளன்று தங்கள் அமைப்பு துவங்கப்பட்டதை கொண்டாடு பவர்கள் முந்திக்கொண்டு அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்த நாளை தேர்வு செய்தது ஏன்?
புதுச்சேரியில் வள்ளலார் பிறந்த 200வது ஆண்டு என்ற புதுக்காரணத்தை புனைந்து கூறியுள்ளனர். வள்ளலார் ஆன்மீகவாதியாக இருந்த போதும் இவர்கள் முன்வைக்கும் சனாதனத்திற்கு முற்றிலும் எதிராக செயல்பட்டவர். எனவே வள்ளலார் பெயரை கூறும் தகுதி இவர்களுக்கு இல்லை. மாறாக, தமிழகத்தில் மனு அநீதியை உயர்த்திப்பிடிக்கவே காந்தி அடிகளின் பிறந்த நாளை இவர்கள் தேர்வு செய்தனர் என்பது உறுதி. இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெறும் அதே நாளில் சமூக நல்லிணக்க பேரணி நடை பெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவள வன் அறிவித்தார். பிறகு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய அமைப்புகள் இணைந்து அக்டோபர் 2ந்தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியை நடத்த அறைகூவல் விடுத்ததோடு அனைத்து ஜன நாயக முற்போக்கு சக்திகளும் இதில் இணைய வேண்டும் என அழைப்புவிடுத்தன.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் மனிதசங்கிலி உட்பட எந்த இயக்கத்திற்கும் அக்டோபர் 2ந்தேதி அனுமதி இல்லை என தமிழக காவல்துறை அறிவித்ததைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி அக்டோபர் 11ந்தேதி நடைபெற உள்ளது. இந்த இயக்கம் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு க்கு 40க்கும் மேற்பட்ட கட்சிகள் , அமைப்பு கள், மனித சங்கிலியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. இந்த மனித சங்கிலி தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் எப்பொழு தும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவ நெறியின் பக்கமே என்பதை யும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்க கால பாரம்பரியமே தமிழகத்தின் பாரம்பரியம் என்பதையும் எடுத்துக்காட்டுவ தாக அமைந்துள்ளது. மதவெறி சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என ஓங்கி உரைத்து தமிழகம் மனிதச்சுவராக எழுந்து நிற்க உள்ளது. மனுநீதி என்று சனாதன வாதிகளால் கூறப்படும் மனுசாஸ்திரம் முற்றிலும் சம நீதிக்கு, சமூகநீதிக்கு எதிரானது. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை சாதியாக பிரித்து சாதிக்கு ஒரு நீதி வகுப்பதுதான் மனு நீதி. மேலும் இது பெண்களுக்கு எதிரானது. உழைப்புக்கு, உழைப்பவர்களுக்கு எதிரா னது. இதை அம்பலப்படுத்திய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பேச்சை திரித்து இந்துக்களை இழிவுபடுத்திவிட்ட தாக ஓலமிட்டது ஆர்எஸ்எஸ் பாஜக வகை யறா. ஆனால் உண்மையில், பெரும் பகுதி இந்துக்களுக்கு எதிரான கூட்டம் ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறாதான். பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை, சுதந்திரமும் இல்லை, அவர்கள் எப்பொழுதும் ஒரு ஆணை சார்ந்தே வாழ வேண்டும். குழந்தை பெற்றுத்தருவது மட் டும் தான் பெண்களின் கடமை. அவ்வாறு குழந்தை பெற தகுதியில்லாத அல்லது நோய்வாய்ப்பட்ட பெண்களை விலக்கி வைக்கலாம் என மனுஸ்மிருதி கூறுகிறது.
“பால்யே பிதுர்வஸே விஷ்டேது பாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபேஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”
அதாவது, ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் போது தந்தையையும், பிறகு சகோதரனையும் திருமணத்திற்கு பிறகு கண வனையும், முதுமைக் காலத்தில் மகன் களையும் சார்ந்து இருக்க வேண்டும். ஒருபோதும் அவருக்கு சுதந்திரம் இல்லை என்பதே மனுநீதி. பெண்கள் அசுத்தமான வர்கள், அவர்களுக்கு ஒருபோதும் கல்வியை தரக் கூடாது என்றும் மனு அநீதி பேசுகிறது. அதுமட்டுமின்றி, சூத்திரர்களையும் பெண்களையும் கொல்வது பாவம் ஆகாது என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 11, ஸ்லோ கம் 66) கூறுகிறது. மனிதர்களுக்குப் பெயர் வைப்பதில்கூட உயர் வர்ணத்தாருக்கு மங்கலத்தையும், சத்திரியருக்கு பலத்தையும், வைசியருக்கு பொருளையும், சூத்திரருக்கு இழிவையும் சுட்டும்படி இருக்க வேண்டும் என சொல்லும் மனு நீதியை அறிவுள்ளவர்கள் ஏற்க முடி யுமா? விவசாயம் ஒரு பாவகரமான தொழில் என்றும், அதில் உயர் வர்ணத்தவர் என்று கூறப்படுபவர்கள் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்றும் மனு கூறுகிறான். மேலும் உழைக்கும் மக்களான சூத்தி ரர்களுக்கு உடமைகளோ, உரிமைகளோ இல்லை. அவர்கள் எந்த சொத்தையும் வைத்துக்கொள்ள உரிமையில்லாதவர்கள். சாதி மறுத்து திருமணம் செய்வது கடுமை யான தண்டனைக்குரிய குற்றம் என்றெல் லாம் மனுஸ்மிருதி கூறுகிறது.
ஒருவர் செய்த தவறின் அடிப்படையில் தண்டனை வழங்குவது இந்திய குற்றவியல் சட்டம். ஆனால் குற்றம் செய்தவர் என்ன சாதி யைச் சேர்ந்தவர், அல்லது வர்ணத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து சாதிக்கு ஒரு நீதி வகுப்பதுதான் மனு அநீதி. நவீன இந்தியா உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் இடத்தில் மனுநீதி யை வைக்க துடிக்கிறார்கள் இந்துத்துவா கூட்டத்தினர். மதச்சார்பின்மையை சிதைப் பதே அவர்களின் நோக்கம். இதற்காகவே அவர்கள் மதச்சார்பின்மையையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்திய காந்தி யடிகளின் பிறந்த நாளில் தங்களது அணி வகுப்பை நடத்த திட்டமிட்டனர். காந்தியடிகள் பிறந்த நாளில் இதற்கு தமிழக காவல்துறை தடைவிதித்த நிலை யில், நவம்பர் 6ந்தேதி இவர்களது அணி வகுப்பை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தை மதவெறிக்காடாக்க முயல்கிறது ஆர்எஸ்எஸ் கூட்டம். இதை ஒரு போதும் அனுமதியோம் என சூளுரைத்து அக்டோபர் 11ந்தேதி தமிழகம் ஒரே மனித னாய் எழுந்து நிற்கட்டும். மக்களைப் பிரிப்பது அவர்கள் வேலை. சேர்ப்பது எங்கள் பணி என முழக்கமிட்டு தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிகள் நீளட்டும். மனுஅநீதிக்கு மனித நீதி வெல்லட்டும். ஆர்எஸ்எஸ் மேற்கொள்ளும் அனைத்து சதி நடவடிக்கைகளையும் வீழ்த்துவதற்கா னப் போரின் துவக்கம்தான் அக்டோபர் 11 மனிதச் சங்கிலி பேரியக்கம்.