tamilnadu

ஒன்றுபட்டு போராடுவோம்! மணிப்பூர் மக்களுக்கு சிபிஎம் அழைப்பு

ஒன்றுபட்டு போராடுவோம்!  மணிப்பூர் மக்களுக்கு சிபிஎம் அழைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் குடியர சுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டதற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக சிபிஎம் மணிப்பூர் மாநிலச் செயலாளர் சேத்ரி மயூம் சண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டதை சிபிஎம் மாநிலக்குழு கடுமையாக கண்டிக் கிறது. 1958இல் கேரளாவில் குடி யரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப் பட்டதிலிருந்து சிபிஎம் இந்திய அரசியலமைப்பின் 356ஆவது பிரி வுக்கு எதிராக உறுதியாக நின்றுள் ளது. அதே போன்று தற்போது மணிப்பூரின் ஒற்றுமை மற்றும் ஒரு மைப்பாட்டிற்காக உறுதியாக நிற்கி றது. மேலும் பாஜகவின்  தலை மையிலான ஒன்றிய அரசு ஜம்மு -  காஷ்மீரை பிரித்தது போல மணிப்பூரையும் பிரிக்க அனுமதிக் கக்கூடாது.

பாஜக தான் பொறுப்பு

மணிப்பூரில் குடியரசுத் தலை வர் ஆட்சி திணிக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம். பாஜக தலை மையும் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்களுமே (பாஜக) மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கு பொ றுப்பானவர்கள்.  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையற்ற வர்களாக இருப்பது மற்றும் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக மணிப்பூர் பற்றிய அவர்களின் கருத்து பிளவுபட்டுள்ளது.

ஒன்றுபட்டு போராட சிபிஎம் அழைப்பு  பாசிச எதிர்ப்பு, ஜனநாயக, மதச் சார்பற்ற, இடதுசாரி மனப்பாங்கு டைய தனிநபர்கள், குழுக்கள் மற்றும் சக்திகள், அரசியல் கட்சி கள், சிவில் சமூக அமைப்புகள், சாதி, மதம், இனம், மதம் ஆகிய வற்றைப் பொருட்படுத்தாமல், மணிப்பூரின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்காக, பிரிவினை வாதக் கொள்கை, மதவாத திட் டங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட சிபிஎம் அழைக்கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.