‘நீட்’ விலக்கு கோரி சட்டப் போராட்டம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஏப்.9- ‘நீட்’ தேர்வு முறையிலி ருந்து விலக்கைப் பெறு வதற்காகத் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தொட ர்வது, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்வது என்று சட்டமன்ற அனைத்துக் கட் சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறி வித்தபடி அவரது தலை மையில், சென்னை தலை மைச் செயலகத்தில், புதன் கிழமை (ஏப்.9) சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலை வர்களின் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், எஸ். ரகுபதி, மா. சுப்பிரமணியன், நாடா ளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன், பரந்தாமன், நா. எழி லன் (திமுக), செ. ராஜேஷ் குமார், பழனி நாடார் (காங் கிரஸ்), நாகை மாலி, எம்.சின்னதுரை (சிபிஎம்), டி. ராமச்சந்திரன், கே. மாரி முத்து (சிபிஐ), ம. சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), தி. சதன் திருமலைக் குமார், பூமிநாதன் (மதிமுக), கோ.க. மணி (பாமக), எம்.எச். ஜவாஹிருல்லா, ப. அப்துல் சமது (மமக), தி. வேல்முருகன் (தவாக), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமக) ஆகியோர் பங்கேற்றனர்.
தீர்மானம்
இக்கூட்டத்தில், “மருத்து வக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ் நாட்டிற்கு ‘நீட்’ தேர்வு முறை யிலிருந்து விலக்கு அளிப்ப தற்காகத் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை நிறை வேற்றிய சட்டமுன்வடி விற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கி றது” என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அதிமுக - பாஜக புறக்கணிப்பு
நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட் டத்தில், அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.