tamilnadu

img

விழுப்புரத்தில் லாரி மோதி பெரியார் சிலை சேதம், பதட்டம்

விழுப்புரம்,ஜன.20- விழுப்புரம் காமராஜர் தெரு மற்றும் திரு.வி.க தெரு சந்திக்கும் இடத்தில் தலைமை தபால் நிலையம் அருகே பல ஆண்டுகளாக முழு உருவ  பெரியார் சிலை சுமார் 6 அடி உயரத்தி லும், அதன் பீடம் 4 அடி உயரத்தி லும் அமைக்கப்பட்டு. அந்த சிலையை  சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப் பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன.இந்நிலையில்  புதன்கிழமை இரவு சுமார்  11 மணிக்கு விழுப்புரம்  திரு.வி.க  வீதி வழியாக வந்த கன்டெய்னர் லாரி  பெரியார் சிலை அருகே திடீரென வளைந்த போது, பெரியார் சிலை மீது  மோதியது. இதில் அந்த சிலை பீடத்துடன் உடைந்து கீழே  விழுந்த தில் முற்றிலும் சேதம் அடைந்தது. இது  குறித்து தகவல் அறிந்து விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து  வந்து கன்டெய்னர் லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தனர். இதனி டையே மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஸ்ரீநாதா, துணை கண்காணிப் பாளர் பார்த்திபன், வட்டாட்சியர் அனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த கன்டெய் னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்  மகாராஷ்டிராவை சேர்ந்த மச்சீந்திரா  தபலி (52) என்பதும், புதுச்சேரியில்  உள்ள ஒரு தனியார் நிறுவனத்தி லிருந்து வாகனங்களுக்கு பயன் படுத்தும் டயர்களை ஏற்றிக் கொண்டு புனேவுக்கு அந்த கன்டெய்னர் லாரி புறப்பட்டதும், வழிதவறி விழுப்புரம் நகரத்தில் காந்தி சிலை வழியாக காமராஜர் வீதிக்குள் வந்தபோது எதிர்பாராதவிதமாக பெரியார் சிலை மீது மோதியதும், இதில் சிலை உடைந்து சேதம் அடைந்தது தெரிய வந்தது. உடனடியாக லாரி ஓட்டுனரை கைது செய்து,லாரியை பறிமுதல் செய்த னர். மேலும், சேதத்தில்  சதி திட்டம்  ஏதாவது இருக்குமோ என்ற கோணத் தில் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் கைப் பற்றி ஆய்வு செய்து அடுத்த கட்ட  விசாரணையில் ஈடுபட்டு  வருகின்ற னர். இதனிடையே பெரியார் சிலை  சேதம் அடைந்த சம்பவம் பற்றிய தகவல்  அறிந்த அரசியல் கட்சியினரும், நகர பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நீடித்ததால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க ஏராளமான காவலர்கள் பாது காப்புக்காக குவிக்கப்பட்டு  பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். திமுக மற்றும் பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.  இந்நிலை யில், அதிகாலை 4.30 மணிக்கு வரு வாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து, பெரியார் சிலையை கைப்பற்றி விழுப்புரம்  வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைத்தார்.