புதுதில்லி, ஜூன் 22- ஒன்றிய பாஜக அரசின், மாநில, மத்திய வரிகள் தள்ளுபடி திட்ட விதிகளால், 1200 கோடி ரூபாய்க் கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆடை ஏற்றுமதியாளர்கள் மேற்கொள்ளும் உற்பத்தி செலவு களையொட்டி செலுத்திய வரி மற்றும் கட்டணங்களுக்கு, மாநில, மத்திய வரிகள் தள்ளுபடி திட்டத் தின் கீழ் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு இந்த தள்ளு படியை பணமாகக் கொடுக்காமல் அதை ‘ஸ்கிரிப்ஸ்’ (பத்திரம் போன்ற எழுத்துப்பூர்வ ஆவ ணம்) ஆக மாற்றி, யாருக்கு வேண் டுமானாலும் விற்பனை செய்யும் வகையில் வழங்கி வருகிறது. பொதுவாக ஏற்றுமதியாளர்கள் இந்த ஸ்கிரிப்ஸ்-ஐ இறக்குமதியா ளர்களுக்குத்தான் விற்பனை செய் வார்கள். இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியை பணமாகச் செலுத்துவதற்கு மாற்றாக இந்த எழுத்துப்பூர்வ ஆவணத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.
இந்த தள்ளுபடி தொகைக்கான ஸ்கிரிப்ஸ் டிசம்பர் மாதம் 3 சத விகித தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 20 சதவிகித தள்ளுபடி விலைக்கு அது சென்றுள்ளது. இதுதான் தற்போது ஆடை ஏற்று மதியாளர்களை பாதிப்புக்கு உள் ளாக்கி இருப்பதாக கூறப்படு கிறது. 20 சதவிகித தள்ளுபடி விலை யில் கிடைக்கும் ரிபேட் ஸ்கிரிப்ஸ் (Rebate Scrips) மூலம் இறக்கு மதியாளர்களுக்கு அதிகப்படி யான நன்மை கிடைத்தாலும், ஏற்று மதியாளர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (AEPC) உறுப்பினரும், ஆடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (GEMA) தலைவருமான விஜய் ஜிண்டால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வருடாந்திர ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 44 பில்லி யன் டாலர்கள் (சுமார் ரூ. 3 லட்சத்து 424 கோடி) ஆகும். இதில், ஆடை ஏற்றுமதி மதிப்பு மட்டும் 16 பில்லி யன் டாலர்கள் (சுமார் ரூ. 1 லட்சத்து 247 கோடி) ஆகும். அதாவது ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 36 சதவிகிதத்தை ஆடை ஏற்றுமதி கொண்டிருக்கிறது. இந்நிலையில், தள்ளுபடி திட்டத்தின் கீழ், திருப்பிச் செலுத்தப் படும் தொகை சுமார் 5 சதவிகி தம். தோராயமாக ரூ. 6 ஆயிரம் கோடி. இதில் 20 சதவிகிதம் தள்ளு படி என்பது ஏற்றுமதியாளர் களுக்கு நேரடியாகச் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.