தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மருத்துவர் ஆகும் எண்ணத்துடன் +2வில் பாடங்களைத் தேர்வு செய்வார்கள். நீட் தேர்வு பற்றிய அடிப்படைத் தகவல் களைத் தெரிந்து கொள்வது அவசிய மாகும. நீட் தேர்வை தேசியத் தகுதித் தேர்வு முகமை நடத்துகிறது. தனது இணைய தளத்தில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பதிவு செய்திருக்கிறது. சில மாதிரித் தேர்வு களைக் கூட தனது இணையதளத்தில் நடத்துகிறார்கள். தேர்வை தாங்கள் விரும்பும் மொழியில் மாணவர்கள் எழுத லாம். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் தமி ழில் இருக்கும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது உயிரியலுக்குப் பதி லாக தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களைப் படித்து 50 விழுக் காடு மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கு 40 விழுக்காடு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மணிநேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதி யியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்க ளில் இருந்து 180 வினாக்கள் இடம்பெறும். வினாக்கள் கொள்குறி வகை(Objective type)யில் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். வினாத்தாள்கள் மத்தியக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்ப டையிலேயே தயாரிக்கப்படுகின்றன. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், ஒன்றிய மற்றும் மாநிலப் பாடத்திட் டத்தை ஒப்பிட்டு, மாநிலப் பாடத்திட் டத்தில் இல்லாததைப் படிப்பதற்குத் தயாராகிக் கொள்வது அவசியமாகும்.