tamilnadu

img

ஒன்றிய அரசின் மொழித் திணிப்பு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது!

திருவனந்தபுரம், நவ.2- “நாட்டை ஒரே மொழிக்குள் சுருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாகவும் அது தடுக்கப்பட வேண்டும்” என்றும் கேரள முதல்வர் பினராயி விஜ யன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில், மலையாள தினம் மற்றும் நிர்வாக மொழி வாரத்தின் மாநில அளவிலான கொண்டாட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் வெள்ளியன்று (நவ.1) துவக்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசி யதாவது: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மண்டி யிட வைப்பதில் நமது மொழியியல் பன்முகத்தன்மை பெரும் பங்கு வகித் தது. அந்த மொழிப் பன்முகத்தன்மையை ஒற்றை மொழியாகச் சுருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின்படி குறிப்  பிட்ட அந்தஸ்தைத் தவிர, வேறு சில மொழிகளைத் திணிக்க முடியாது. அவ்வாறு வற்புறுத்தி திணிக்கப்பட்டால், நம் மொழி மறைந்து விடும். இதனால் கலாச்சாரமும் மறைந்து விடும். இது போன்ற எதிர்விளைவுகளை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வருக்கும் உள்ளது. நெருக்கடியான காலங்களில் நாம் காட்டும் ஒற்றுமை உல குக்கே எடுத்துக்காட்டாகும். நமது தாய்  மொழிதான் நமது ஒற்றுமைக்கு அடிப்படை. எனவே, தாய்மொழியை இழந்தால் நாட்டின் ஒற்றுமையும், ஒரு மைப்பாடும் இல்லாமல் போய்விடும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜ யன் பேசினார். முன்னதாக, கவிஞர் ஈஜாச்சேரி ராமச்  சந்திரனையும் டாக்டர். கோபால கிருஷ்ணனையும் முதல்வர் பாராட்டி கவு ரவித்தார். சமகால ஜனபதம் அதிகா ரப்பூர்வ மொழி பதிப்பு மற்றும் அரசாங்க  நாட்காட்டி வெளியிடப்பட்டது. மாநில  அளவிலான நிர்வாக மொழி விருது களும் வழங்கப்பட்டன. தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், கேரளப் பல்கலைக்கழக மலையாளத் துறை பேராசிரியர். டாக்டர். சி.ஆர். பிரசாத், பொது நிர்வா கத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் கே.ஆர். ஜோதிலால், எஸ். ஹரி கிஷோர் ஆகியோர் உரையாற்றினர்.