திருவனந்தபுரம், பிப்.12- கேரளம் தன்னை ஆச்சரியப் படுத்தியதாக வரலாற்று ஆய்வா ளர் ராமச்சந்திர குஹா தெரி வித்துள்ளார். மாத்ருபூமி இலக்கிய விழாவின் இறுதிப்போட்டியை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றிருந்தாலும், கேரளத்துக்கு முதன்முறையாக வந்தது நாற்பது வயதில்தான். மேற்கு தொடர்ச்சி மலை ஆய்வு தொடர்பாக அன்று மாதவ் காட்கிலுடன் வந்தேன். வரவேற்பதற்காக அப்போதைய குசாட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வந்தார். ஒரு துணைவேந்தர் சாதாரண மனிதர் போல் உடை யணிந்து வந்ததை முதல் முறையாக பார்க்க முடிந்தது. நாட்டின் பிற இடங்களில், துணைவேந்தர்கள் கோட் அணிந்து, மெய்க்காப்பாளர்களுடன் காணப்படு கின்றனர். நாட்டின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், கேரளாவில் சமூக அமைப்புகள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. கேரளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் உள்ளது. கேரளத்தில் இலக்கிய விழாக்கள் மற்ற இடங்களிலிருந்து வேறுபட்டவை. முற்றிலும் ஜனநாயக முறையிலேயே இங்கு பணிகள் நடைபெற்று வரு கின்றன என்றார்.