tamilnadu

10, 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் கரூர் பரணி பார்க் பள்ளி சாதனை

10, 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில்  கரூர் பரணி பார்க் பள்ளி சாதனை

கரூர், 19-  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் பரணி பார்க் பள்ளி அபார சாதனை புரிந்துள்ளது.  மேல்நிலை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் தாணுமாலயன் 590 மதிப்பெண் பெற்று கலை பாடப்பிரிவில் கரூர் மாவட்ட முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி சாதனா 588 மதிப்பெண் பெற்று கரூர் மாவட்ட மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவி இலக்கியா 585 மதிப்பெண்ணும்,   அர்ச்சனா 585 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி தனஸ்ரீ 593, மாணவி தாரணி 591, ஜெயஸ்ரீ 591, பிரணவ் ஸ்ரீநிதி 589 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் பார்த்தீபன் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு  மதிப்பெண்களும், அண்ணா பல்கலைக் கழக இஞ்சினியரிங்க் கட் ஆப் 200-க்கு 200 பெற்று மாநில அளவில்  முதலிடம் பெற்று அபார சாதனை படைத்துள்ளார்.    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 19 மாணவர்கள் 480-க்கு மேல் பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர். மாணவி இலக்கியா 492 மதிப்பெண்ணும், ஹர்ஷினி  490 மதிப்பெண்ணும், புகழ் ஹர்ஷினி 490 மதிப்பெண்ணும், ஸ்ரீமதி 489 மதிப்பெண்ணும், அபிநயா 489 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மேலும் கணித்ததில் 5 மாணவர்களும், அறிவியலில் 3 மாணவர்களும், சமூக அறிவியலில் ஒரு மாணவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  பரணி பார்க் பள்ளியில் பொதுத் தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  நீட்,  ஜே.இ.இ சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.