சென்னை, ஜன.17- சென்னை அருகே பெரும் பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய அரசின் நிறு வனத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று பார்வை யிட்டு, ஆய்வு செய்து, புதிய நூல்களை வெளியிட்டார் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி மேற் கொண்ட பெரும் முயற்சியால், உலகின் மூத்த மொழியாம், சொல் வளமும், இலக்கிய வள மும் கொண்ட தமிழ் மொழி 2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழி யாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற கருணாநிதி யின் கனவினை நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படை யில் 2006 ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செம்மொழிக்கான நிறுவன மொன்று அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல்பழங் காலம் முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டி லும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. செம்மொழித் தமிழின் தொன்மையையும், தனித் தன்மையையும், அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறு வனம் கொண்டுள்ளது. கருணாநிதியால் 2007- ஆம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத் தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்நிலத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடம் செம்மொழித் தமி ழாய்வு ஒன்றிய அரசு நிறுவன த்தின் ஆட்சிக்குழு தலைவர்,
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னி லையில் பிரதமரால் 12.1.2022 அன்று செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக பெரும்பாக் கத்தில் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு வருகை புரிந்து, அங்குள்ள நூலகத் தைப் பார்வையிட்டார். நூலகத்தி லுள்ள பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்க ளின் மின்படியாக்கம் குறித்தும் ஆவலோடு கேட்டறிந்தார். மேலும், 2010 முதல் 2019 வரை கருணாநிதி செம் மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்க ளுக்கு 22.1.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடை பெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.