சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு
சென்னை, மே 5 – மாமேதை காரல் மார்க்சின் உருவச் சிலை திங்களன்று (மே 5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நிறுவப்பட்டது. கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு ஏப். 2-6 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டின் முகப்பில் சிற்பி சரண்ராஜ் கைவண்ணத்தில் உருவான, காரல் மார்க்சின் வார்ப்பு சிலை வைக்கப் பட்டது. மார்க்சியத்தால் கவரப்பெற்ற பல லட்சம் பேரின் மனம் கவர்ந்த அந்தச் சிலை, காரல் மார்க்சின் 207-ஆவது பிறந்த நாளான திங்களன்று (மே 5) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் சிற்பி கே. பிரபாகரன் எழிலார்ந்த முறையில் அமைத்துள்ள மேடையில் சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். நிகழ்வில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ் ணன், உ. வாசுகி, மூத்த தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், ப. செல்வசிங், மத்தி யக்குழு உறுப்பினர் என். குணசேக ரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கள் எஸ். கண்ணன், கே. சாமுவேல் ராஜ், கே. சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. ஜான்சிராணி, ஆர். பத்ரி, எம். ராமகிருஷ்ணன், வெ. ராஜசேகரன், இரா. சிந்தன், இரா. சுதிர், தோ. வில்சன், க. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.