tamilnadu

img

கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நீதிபதிகள் பங்கேற்பு

கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில்  போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நீதிபதிகள் பங்கேற்பு

நீதிபதிகள் பங்கேற்பு

கும்பகோணம், ஜுன் 27-  சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.  இந்த நிகழ்வில் அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் மாவட்ட நீதிபதி ராதிகா தலைமை ஏற்றார். கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதியும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பொறுப்பு வகிக்கின்ற மணிகண்ட ராஜா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதன்மை சார்பு நீதிபதி ஜியாவூர் ரஹ்மான் சிறப்புரையாற்றினார். கூடுதல் சார்பு நீதிபதி சி. சிவக்குமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜய் ஆனந்த் மற்றும் நீதித்துறை நடுவர் ரெங்கேஸ்வரி உள்ளிட்டோர் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர்.  இந்த நிகழ்வை கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர்கள் பாலமுருகன், வெங்கடேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.